News June 14, 2024

வேடசந்தூர்: தக்காளி விலை உயர்வு

image

வேடசந்தூர் மார்க்கெட்டில் தக்காளி விலை ரூ.100 எட்டியது. கடந்த வாரம் பெய்த மழையால் தக்காளி பயிர் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதால் வேடசந்தூர் சந்தைக்கு தக்காளி வரத்து குறைந்துள்ளது. கடந்த வாரங்களில் 20 கிலோ கொண்ட பெட்டி ரூ.700 முதல் 900 வரை விற்பனையானது. நேற்று 20 கிலோ கொண்ட பெட்டி ரூ.1,500 முதல் 2,000 வரை விற்பனையானது. இதனால் ஒரு கிலோ தக்காளி ரூ.100 முதல் 120 வரை விற்பனையாகிறது

Similar News

News March 3, 2026

திண்டுக்கல்: தேர்வு இல்லாமல் அரசு வேலை!

image

இந்தியா முழுவதும் உள்ள ஆதார் சேவை மையங்களில் காலியாக உள்ள ஆபரேட்டர் (Operator) மற்றும் சூப்பர்வைசர் (Supervisor) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

1. வகை: மத்திய அரசு வேலை

2. பணியிடங்கள்: 252

3. வயது: 18 வயது பூர்த்தியடைந்தவர்

4. சம்பளம்: ரூ.20,000

5. தகுதி: 12ஆம் வகுப்பு

6. கடைசி தேதி: 10.03.2026

<>7.விண்ணப்பிக்க: CLICK HERE<<>>

இதனை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

News March 3, 2026

திண்டுக்கல்லில் தட்டிதூக்கிய அமைச்சர் பெரியசாமி!

image

திண்டுக்கல் மாவட்ட அதிமுக தொண்டர் உரிமை மீட்பு நிர்வாகிகள், அமைச்சர் ஐ.பெரியசாமி முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். நிர்வாகிகள் பசும்பொன் மற்றும் வைகை பாலன் தலைமையில் திரளானோர் தாய் கழகமான திராவிட முன்னேற்றக் கழகத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர். இந்நிகழ்வின் போது முக்கிய திமுக நிர்வாகிகள் உடனிருந்தனர். புதியதாக இணைந்த நிர்வாகிகளுக்கு அமைச்சர் வாழ்த்து தெரிவித்தார்.

News March 3, 2026

திண்டுக்கல் கலெக்டர் அதிரடி ஆய்வு!

image

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு நேற்று தொடங்கியது. திண்டுக்கல் மற்றும் பழநி கல்வி மாவட்டங்களில் 216 பள்ளிகளைச் சேர்ந்த 21,391 மாணவர்கள் தேர்வு எழுத ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நேற்று நடந்த தமிழ் பாடத் தேர்வை 21,052 மாணவர்கள் எழுதினர்; 339 பேர் வரவில்லை. தேர்வு மையங்களில் செய்யப்பட்டுள்ள அடிப்படை வசதிகள் குறித்து கலெக்டர் சரவணன் மற்றும் முதன்மை கல்வி அலுவலர் உஷா ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர்.

error: Content is protected !!