News June 14, 2024

குழந்தை தொழிலாளர்கள் இருவர் மீட்பு

image

குழந்தை தொழிலாளர் முறையை ஒழிக்கும் விதமாக பெரம்பலூர் மாவட்டத்தில் பல பகுதிகளில் குழந்தை தொழிலாளர்கள் யாரேனும் கடைகளில் பணிபுரிகின்றனாரா என்று பெண்கள் (ம) குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு பிரிவு போலீசார் கடைகள் (ம) கல்குவாரிகள் போன்ற இடங்களில் சோதனை செய்ததில் கவுல்பாளையத்தில் ஒரு கடையில் பணியமர்தப்பட்டிருந்த குழந்தை தொழிலாளர்கள் இருவரை மீட்டனர்.

Similar News

News March 2, 2026

பெரம்பலூர்: வாக்கு சேகருப்பில் ஈடுபட்ட மகளிரணி

image

பெரம்பலூர், சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு பெரம்பலூர் நகரம் 1வது வார்டு பகுதியில், திமுக மகளிர் அணியை சேர்ந்தவர்கள் பொதுமக்களிடம் வீடு வீடாக சென்று, திமுகவின் ஐந்தாண்டு சாதனைகளை விளக்கி வாக்கு சேகரித்தனர். இதில், ஏராளமான மகளிர் கலந்துகொண்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

News March 2, 2026

பெரம்பலூர்: பிளஸ் 2 தேர்வு எழுதும் 7276 மாணவர்கள்

image

பெரம்பலூர், தமிழ்நாடு முழுவதும் இன்று பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் பிளஸ் 2 பொதுத்தேர்வு நடைபெறுகிறது. இதனையடுத்து, பெரம்பலூர் மாவட்டத்தில் பிளஸ்-2 அரசு பொதுத் தேர்வை 82 பள்ளிகளை சேர்ந்த 3,783 மாணவர்களும், 3,493 மாணவிகளும் என மொத்தம் 7,276 பேர், 36 தேர்வு மையங்களில் எழுதுகிறார்கள். மாணவ – மாணவிகள் முதல் தேர்வாக தமிழ் தேர்வினை இன்று எழுதுகிறார்கள்.

News March 2, 2026

பெரம்பலூர்: தெரு நாய் கடித்து மான் உயிரிழப்பு

image

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் எழுமூர் கிராமப் பகுதிக்குள் பெண் மான் ஒன்று தண்ணீர் தேடி வந்துள்ளது. இந்த மானை அப்பகுதியில் சுற்றி தெரியும் தெரு நாய்கள் கடித்ததில் மான் பரிதாபமாக உயிரிழந்ததாக கூறப்படுகிறது. தகவலை அறிந்து வனத்துறையினர் விரைந்து வந்து மானை முருக்கன்குடி காப்பு காட்டில் புதைத்தனர்.

error: Content is protected !!