News June 14, 2024
காலை 9.30 மணிக்கு கொச்சி கொண்டு வரப்படும் உடல்கள்

குவைத் நாட்டின் மங்காஃப் நகரில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 45 இந்தியர்கள் பலியாகினர். இதையடுத்து பலியானவர்களின் உடல்களை கொண்டு வர இந்திய விமானப் படையின் விமானம் குவைத் சென்றது. இந்த நிலையில் 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்கள், இன்று காலை 9.30 மணிக்கு கேரள மாநிலம் கொச்சிக்கு கொண்டுவரப்படுகின்றன. இதில் 31 பேரின் உடல்கள் கொச்சியில் அஞ்சலிக்காக வைக்கப்பட உள்ளது.
Similar News
News March 8, 2026
சர்வதேச மகளிர் தினம் உருவானது எப்படி?

ஆண்டுதோறும் மகளிர் தினத்தில் வாழ்த்துகள் பறந்தாலும், அதன் பின்னால் உள்ள வலி, வரலாறு பலருக்கும் தெரிவதில்லை. 1908-ல் வாக்குரிமை, சம பணிநேரம் & சம ஊதியம் கேட்டு நியூயார்க்கில் பெண்கள் வீதியில் இறங்கி போராடினர். 1910-ல் ஜெர்மனியை சேர்ந்த கிளாரா ஜெட்கின் முன்மொழிந்ததன் பேரில், 1917-ல் ரஷ்ய பெண்கள் மார்ச் 8-ம் தேதி நடத்திய Peace and Bread போராட்டமே, பின்னாளில் உலக மகளிர் தினம் உருவாக காரணமானது.
News March 8, 2026
மார்ச் 8: வரலாற்றில் இன்று

*1908 – பிரிட்டிஷ் அரசுக்கு எதிரான திருநெல்வேலி எழுச்சி போராட்டத்தில் நால்வர் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தனர். *1911 – சர்வதேச மகளிர் தினத்திற்கான தீர்மானம் முதல்முதலாக நிறைவேறியது. *1989 – இந்திய கிரிக்கெட் மகளிர் அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் பிறந்த தினம். *1934- தமிழ் எழுத்தாளர் ML தங்கப்பா பிறந்த தினம். *1972- பாலிவுட் நடிகர் தருண் போஸ் நினைவு தினம்.
News March 8, 2026
7 நாட்களில் நாடு திரும்பிய 52,000 இந்தியர்கள்

இஸ்ரேல் – ஈரான் போரை அடுத்து மத்திய கிழக்கு நாடுகளின் நிலைமையை தொடர்ந்து கண்காணித்து வருவதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. வளைகுடா நாடுகளின் வான்வெளி போக்குவரத்து ஓரளவு திறக்கப்பட்டதன் மூலம் விமான நிறுவனங்கள் வணிக விமானங்களை இயக்குகின்றன என்றும், மார்ச் 1 முதல் 7-ம் தேதி வரை வளைகுடா நாடுகளில் இருந்து 52,000 பேர் இந்தியாவுக்குத் திரும்பியுள்ளனர் என்றும் குறிப்பிட்டுள்ளது.


