News June 14, 2024
தனுஷுக்கு எதிரான வழக்கு முடித்து வைப்பு

சென்னை போயஸ் கார்டனில் நளினா ராமலட்சுமி என்பவருக்கு சொந்தமான பங்களாவில், வாடகைக்கு குடியிருந்த அஜய்குமார் லுனாவத் என்பவரை, உடனடியாக வீட்டை காலி செய்து தரக் கூறி மிரட்டியதாக தொடரப்பட்ட வழக்கை, உயர்நீதிமன்றம் முடித்து வைத்தது. நேற்று நடந்த விசாரணையில் தனுஷ் காணொலி வாயிலாக ஆஜராகியிருந்தார். அப்போது, இருதரப்புக்கும் சமரசம் ஏற்பட்டதாக தனுஷ் தரப்பில் தெரிவிக்கப்பட்டதால் வழக்கு முடித்து வைக்கப்பட்டது.
Similar News
News September 6, 2025
PAK உடனான போட்டியை புறக்கணிக்காதது ஏன்?

ஆசிய கோப்பையில் PAK உடனான போட்டியை இந்தியா புறக்கணிக்காதது குறித்து BCCI மவுனம் கலைத்துள்ளது. மத்திய அரசு வகுத்துள்ள கொள்கைகளின் படி சர்வதேச, பல தரப்பு போட்டிகளில் மட்டுமே IND அணி விளையாடுவதாகவும், PAK உடனான இருதரப்பு போட்டிகளில் விளையாடாது என்றும் விளக்கம் அளித்துள்ளது. மேலும், சர்வதேச போட்டிகளில் விளையாடாவிட்டால், இந்தியா மீது தடை விதிக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
News September 6, 2025
நாளை சந்திர கிரகணம்.. பண மழை கொட்டும் 4 ராசிகள்

நாளை (செப்.7) நிகழும் சந்திர கிரகணத்தால் 4 ராசியினருக்கு அதிர்ஷ்டம் கொட்டும் என ஜோதிடர்கள் கணித்துள்ளனர். *மேஷம்: புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும். சொத்து பிரச்னை தீரும். *ரிஷபம்: வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். நிதிநிலை மேம்படும்.(ஆனால் கவனம் தேவை). *கன்னி: தொழிலில் நல்ல வளர்ச்சி அடைவீர்கள். வாழ்வின் தடைகள் நீங்கும். *தனுசு: திடீர் பண ஆதாயம் கிடைக்கும். நிதி சிக்கல் தீரும்.
News September 6, 2025
செங்கோட்டையன் ஆதரவாளர்கள் EPS-க்கு கடிதம்

அதிமுகவில் இருந்து தங்களையும் நீக்கக் கோரி, செங்கோட்டையன் ஆதரவாளர்கள் EPS-க்கு கடிதம் எழுதியுள்ளனர். ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட நிர்வாகிகள் 100-க்கும் மேற்பட்டவர்கள் தனித்தனியாக கடிதம் எழுதியுள்ளனர். இதில் முன்னாள் MP சத்தியபாமா மற்றும் IT பிரிவு செயலாளர் செந்தில்குமார் ஆகியோரும் அடக்கம். முன்னதாக, கட்சிக்கு எதிராக செயல்படுவதாக கூறி செங்கோட்டையனை EPS பொறுப்பில் இருந்து நீக்கினார்.