News June 13, 2024
ஸ்மார்ட்ஃபோனை அதிக நேரம் பயன்படுத்துபவரா நீங்கள்?

தொழில்நுட்ப உலகில் இளைஞர்கள் மட்டுமின்றி, குழந்தைகள் மத்தியிலும் ஸ்மார்ட்ஃபோன் பயன்பாடு அதிகரித்துள்ளது. இந்நிலையில், ஸ்மார்ட்ஃபோன் திரையை மணிக்கணக்கில் பார்ப்பதால், கண்கள் பலவீனமடைவதுடன், உடலின் மற்ற பாகங்களும் பாதிக்கப்படலாம் என ஆய்வில் தெரியவந்துள்ளது. நாளொன்றுக்கு 4 மணி நேரத்திற்கு மேலாக ஸ்மார்ட்ஃபோனை பயன்படுத்துவது மனநலனிலும் எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தும் எனக் கூறுகின்றனர்.
Similar News
News September 6, 2025
எல்லை பதற்றத்துக்கு பின் தாய்லாந்துக்கு புதிய பிரதமர்

தாய்லாந்தின் புதிய பிரதமராக அனுடின் கார்ன்விரகுல் தேர்வாகியுள்ளார். கம்போடியாவுடனான எல்லை மோதலின்போது, அப்போதைய தாய்லாந்து PM பேடோங்டர்ன் ஷினவத்ரா ராணுவ தளபதியை விமர்சித்ததாக சர்ச்சையில் அவரது பதவி பறிபோனது. இந்நிலையில், நேற்று நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டத்தில் பும்ஜெய்தாய் கட்சி தலைவர் அனுடின் சார்ன்விரகுல், 311 வாக்குகளை பெற்று பிரதமராக தேர்வு செய்யப்பட்டார்.
News September 6, 2025
தினம் ₹200… முடிவில் ₹28 லட்சம் பெறலாம்

தினம் ₹200 என்ற அளவில், மாதம் ₹6,000 முதலீடு செய்தால், ₹28 லட்சம் வரை பெறும் Jeevan Pragati திட்டத்தை LIC வழங்குகிறது. 12 – 45 வயதுடையோர் இணையலாம். 12 முதல் 20 ஆண்டு பாலிசி காலம் கொண்ட இத்திட்டத்தில், 20 ஆண்டு முடிவில் சேரும் ₹14,40,000 தொகையானது கூடுதல் பெனிபிட்டுகளுடன் சேர்த்து அதிகபட்சம் ₹28 லட்சம் வரை பெறலாம். சேமிப்புடன் லைப் இன்ஷூரன்ஸும் வேண்டுவோருக்கு இது சிறந்த திட்டமாகும்.
News September 6, 2025
ஜெர்மனி பயணத்தால் ₹15,516 கோடி முதலீடு: CM ஸ்டாலின்

தமிழ்நாட்டில் EV உற்பத்திக்காக UK-வின் ஹிந்துஜா குழுமம் ₹7,500 கோடி முதலீடு செய்துள்ளதாக CM ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதன்மூலம், 1000-க்கும் மேற்பட்டவருக்கு வேலை கிடைக்கும் என கூறியுள்ளார். மேலும், UK & ஜெர்மனி பயணத்தால் மொத்தம் ₹15,516 கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளது எனவும் இதன் மூலம் 17,613 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.