News June 13, 2024
நேரில் சென்ற அமைச்சர் கீர்த்தி வரதன் சிங்

40 இந்தியர்களை பலி வாங்கிய குவைத் தீ விபத்து நடந்த பகுதிக்கு மத்திய இணையமைச்சர் கீர்த்தி வரதன் சிங் நேரில் சென்றுள்ளார். உடல்கள் கருகி, அடையாளம் தெரியாமல் இருப்பதால், அனைவருக்கும் டிஎன்ஏ பரிசோதனை செய்யப்படவுள்ளது. இதனை உடனிருந்து கவனித்து, இந்தியாவிற்கு உடல்களை மீட்டு வரும் பணியை அமைச்சர் செய்யவுள்ளார். இறந்தவர்களின் உறவினர்கள் இந்தியாவில் பரிதவிப்புடன் காத்துள்ளனர்.
Similar News
News November 12, 2025
கார் வெடிப்பு பின்னணியில் துருக்கி பயங்கரவாதிகளா?

டெல்லி கார் வெடிப்புக்கு துருக்கியில் வைத்து திட்டமிட்டதாக வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சதித்திட்டத்தை அரங்கேற்றிய டாக்டர் உமர் மற்றும் கூட்டாளி முசாமில், துருக்கியில் ஜெய்ஸ் இ முகமது ஏஜென்டை சந்தித்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது. பாஸ்போர்ட்டை கைப்பற்றியதன் மூலம் இத்தகவல்கள் கிடைத்துள்ளன. துருக்கி, சில வருடங்களாக பாக்., ஆதரவு நிலைப்பாட்டை எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.
News November 12, 2025
மோடி அரசின் கருவி தேர்தல் ஆணையம்: அப்பாவு

பாஜக ஆட்சிக்கு வருவதற்கு முன் SIR பணி நடந்ததற்கும் இப்போது நடப்பதற்கும் வித்தியாசம் உள்ளதாக சபாநாயகர் அப்பாவு குற்றம்சாட்டியுள்ளார். தேர்தல் ஆணையம் நடுநிலைமையை தவறவிட்டதாக குற்றம்சாட்டிய அவர், PM மோடியின் ஆணையை ஏற்று நடக்கும் அமைப்பாக அது மாறிவிட்டதாகவும் கூறியுள்ளார். பாஜக ஆட்சிக்கு முன்பு ECI எந்த ஒரு சார்பும் இல்லாத அமைப்பாக இருந்ததாகவும் அப்பாவு குறிப்பிட்டுள்ளார்.
News November 12, 2025
உங்களுக்கு மாரடைப்பு வருமா? 2 நிமிடங்களில் அறிய முடியும்

இளம் வயதினரும் மாரடைப்பால் மரணிக்கும் சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், மாரடைப்பு வருவதை முன்னதாகவே அறிய CT Calcium Scoring என்ற வசதியை அரசு அறிமுகம் செய்துள்ளது. சென்னை ஓமந்தூரார் GH-ல் ₹500 செலுத்தி 2 நிமிடங்களில் பரிசோதனை செய்து கொள்ளலாம். இந்த மெஷின் எப்படி செயல்படுகிறது, டெஸ்ட் எடுப்பதற்கு முன்பு நாம் செய்ய வேண்டியது என்ன என்பதை மேலே உள்ள போட்டோக்களை SWIPE செய்து பாருங்க. SHARE IT.


