News June 13, 2024
செங்கல்பட்டு: பரோட்டா சாப்பிட்டவர் மரணம்

பரோட்டா சாப்பிட்ட இளைஞர், மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுராந்தகம் அருகே நேற்று சுப நிகழ்ச்சியில் பரோட்டா சாப்பிட்ட மோகனசுந்தரம் (28) என்பவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. உறவினர்கள் தனியார் மருத்துவமனை
கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர், இவர் ஏற்கனவே இருந்துவிட்டார் என தெரிவித்தனர்.
Similar News
News September 27, 2025
தாம்பரம் கமிஷனர் அதிரடி உத்தரவு

தாம்பரம் சந்தோஷபுரம் சோதனை சாவடி அருகே செப்.20ம் தேதி எஸ்.ஐ.,வெங்கடேசன், காவலர்கள் ஜலேந்திரன், கதிரேசன் ஆகியோர் வாகன ஓட்டுநர்களிடம் லஞ்சம் வாங்கியுள்ளனர். செப்.23ம் தேதி மேடவாக்கத்தில் போலீசார் திருமுருகன், வெங்கடேசன் ஆகியோர் வியாபாரிகளிடம் லஞ்சம் வாங்கியுள்ளனர். இவர்கள் 5 பேரை தாம்பரம் போலீஸ் கமிஷனர் அபின் தினேஷ் மோதிக் சஸ்பென்ட் செய்து உத்தரவிட்டார். (லஞ்சம் கேட்டா 044-2231 0989 CALL பண்ணுங்க)
News September 27, 2025
செங்கல்பட்டு: கர்ப்பிணிகளுக்கு ரூ.18,000/ APPLY NOW

டாக்டர் முத்துலெட்சுமி மகப்பேறு திட்டத்தின் மூலமாக செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள முதல் இரண்டு குழந்தைகள் பெற்றெடுக்கும் கர்ப்பிணிகளுக்கு மூன்று தவணைகளாக ரூ.18,000/- வழங்கபடுகிறது. ரூ.18,000 வாங்க எங்கேயும் அலைய தேவையில்லை. இங்கு <
News September 27, 2025
பம்மல்: மின்சாரம் பாய்ந்து 2 பேர் பலி

பல்லாவரம் அடுத்த பம்மலில் செயல்பட்டு வரும் பிரபல பிரியாணி கடையில் உள்ள சமையல் அறையில் இன்று (செப்.27) காலை மின்சாரம் பாய்ந்து 2 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடையில் பணிபுரிந்த மின் பணியாளர் மணிகண்டன் மற்றும் கடை ஊழியர் பார்த்திபன் ஆகிய இருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர். இச்சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.