News June 13, 2024

ஜெயக்குமார் வழக்கு: விரைவில் சிக்கும் குற்றவாளிகள்

image

திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் உயிரிழந்த மர்ம வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சிபிசிஐடி எஸ்பி முத்தரசி தலைமையில் பல்வேறு கட்ட விசாரணை நடைபெற்ற முடிவடைந்த நிலையில் இன்று (ஜூன் 13) எஸ்பி முத்தரசி தலைமையில் அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதன் காரணமாக இன்னும் சில நாட்களில் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படுவார்கள் என கருதப்படுகின்றது.

Similar News

News July 8, 2025

வீரவநல்லூரில் இளம்பெண் வெட்டிக்கொலை

image

திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூர் அருகே இளம்பெண் ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொடூர கொலை தொடர்பாக வீரவநல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், தகாத உறவு காரணமாக இந்த படுகொலை நடந்திருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்து ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

News July 8, 2025

நெல்லை மக்களின் மனதில் நீங்காத காந்திமதி

image

நெல்லையில் இன்று தேரோட்டத்தில் கலந்து கொண்ட மக்கள் மகிழ்ச்சியுடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர். பல்லாயிரக்கணக்கான மக்கள் மகிழ்ச்சியில் திளைத்த போதிலும், அவர்களின் மனதில் நெருடலாக இருந்த பெயர் “காந்திமதி”. நெல்லை மக்கள் முதன்முறையாக காந்திமதி யானை இல்லாமல் இந்த தேரோட்டத்தினை நிகழ்த்தியுள்ளனர். நெல்லை மக்களின் நினைவில் இன்றும் காந்திமதி யானை உயிர்புடன் வாழ்ந்துகொண்டிருக்கிறது. *ஷேர்

News July 8, 2025

நெல்லை: பாங்க் ஆப் பரோடா வங்கியில் வேலைவாய்ப்பு

image

நெல்லை: பாங்க் ஆஃப் பரோடா வங்கியில் உள்ளூர் வங்கி அலுவலர் (Local Bank Officer) பணிக்காக தமிழகத்திற்கு 60 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க கடைசி தேதி ஜூலை 24ம் தேதி கடைசி நாளாகும். தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.48,480 முதல் ரூ.85,920 வரை சம்பளம் வழங்கப்படும். நெல்லையில் தேர்வு நடைபெறுகிறது. விண்ணப்பிக்க இங்கே <>க்ளிக்<<>> செய்யவும்.

error: Content is protected !!