News June 13, 2024

கடன் தொல்லைகள் அகல…

image

சனி மற்றும் புதன் கிழமைகளில் பெருமாள் கோயிலுக்குச் சென்று ஸ்ரீசக்கரத்தாழ்வாரைத் தரிசித்து, அவரை 12 முறை வலம் வந்து வழிபட வேண்டும். துளசி சாற்றி அவரை வழிபடுவது மிக்க நல்லது. இதனால், கடனால் உண்டான சங்கடங்கள் நீங்கும். இதை போல, தோரண கணபதியை அன்றாடம் விளக்கேற்றி வழிபடுங்கள். சதுர்த்தி நாள்களில் நைவேத்தியம் சமர்ப்பித்து வழிபட்டால் நிச்சயம் கடன் தொல்லை அகன்று, இல்லறத்தில் இனிமை உண்டாகும்.

Similar News

News September 8, 2025

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல். ▶அதிகாரம்: சிற்றினஞ்சேராமை. ▶குறள் எண்: 452 ▶குறள்: நிலத்தியல்பால் நீர்திரிந் தற்றாகும் மாந்தர்க்கு இனத்தியல்ப தாகும் அறிவு. ▶ பொருள்: தான் சேர்ந்த நிலத்தின் தன்மையால் நீர் தன் இயல்பை இழந்து, நிலத்தின் இயல்பாகவே மாறிவிடும்; மனிதரின் அறிவும் அவர் சேர்ந்த இனத்தின் இயல்பாகவே ஆகிவிடும்.

News September 8, 2025

அதிமுகவை உடைக்க முடியாது: EPS

image

எந்த கொம்பனாலும் அதிமுகவை உடைக்க முடியாது என EPS தெரிவித்துள்ளார். திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் மக்கள் சந்திப்பு பயணத்தின் போது பேசிய அவர், அதிமுகவை எத்தனையோ பேர் உடைக்க பார்க்கிறார்கள், முடக்க பார்க்கிறார்கள் என்றார். ஆனால் அவற்றை தொண்டர்கள், மக்களின் துணையோடு தவிடுபொடியாக்கியதாகவும் அதிமுகவில் மட்டுமே சாதாரண தொண்டன் கூட MP, MLA, CM ஆகலாம் எனவும் EPS குறிப்பிட்டார்.

News September 8, 2025

சிறையில் ₹522 சம்பாதிக்கும் முன்னாள் MP

image

பாலியல் வழக்கில் சிறை தண்டனை அனுபவிக்கும் பிரஜ்வல் ரேவண்ணா நாள் ஒன்றுக்கு ₹522 சம்பாதிக்கிறார். பெங்களூரு பரப்ப அக்ரஹாரா சிறையில் உள்ள அவருக்கு நூலக எழுத்தர் பணி வழங்கப்பட்டுள்ளது. சக கைதிகளுக்கு புத்தகம் வழங்குவது, கொடுத்த புத்தகங்களின் பதிவுகளை பராமரிப்பது அவரது வேலை ஆகும். வாரத்திற்கு 3 நாள்கள் இந்த வேலையை அவர் செய்ய வேண்டும். இவர் முன்னாள் PM தேவ கவுடாவின் பேரன் என்பது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!