News June 12, 2024
பிரதமரின் இத்தாலி பயணம்: காந்தி சிலை சேதம்

3வது முறையாக பிரதமராக பொறுப்பேற்றுக் கொண்ட மோடி, முதல் வெளிநாட்டு பயணமாக இத்தாலி செல்ல உள்ளார். நாளை (13ஆம் தேதி) தொடங்கி 15ஆம் தேதி வரை நடைபெற உள்ள, 50ஆவது ஜி7 உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள உள்ளார். இந்த நிலையில், பிரதமருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, இத்தாலியின் அபுலியா பகுதியில் உள்ள மகாத்மா காந்தி சிலை, காலிஸ்தான் ஆதரவாளர்களால் சேதப்படுத்தப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Similar News
News November 12, 2025
‘தற்குறி’ என சொல்லாதீங்க: எழிலன்

ஒரு சாராரை ‘தற்குறி’ என திமுகவினர் விமர்சிக்கின்றனர். இந்நிலையில், ‘தற்குறிகள்’ என விமர்சனம் செய்வது தவறான அணுகுமுறை என்று திமுக MLA எழிலன் தெரிவித்துள்ளார். நாம் அவர்களிடம் அரசியல் ரீதியாக பேசவில்லை, உரையாடவில்லை; அது நம்முடைய தவறு என்று கூறினார். மேலும், அவர்கள் சங்கிகள் கிடையாது; அவர்களிடம் அரசியல் ரீதியாக பேசினால்தான் போலியான தலைவர்களைப் பற்றி உணர்வார்கள் எனவும் ஆலோசனை வழங்கினார்.
News November 12, 2025
CSK அணி 6 வீரர்களை கழட்டி விட திட்டம்

நவம்பர் 15-ம் தேதிக்குள் IPL அணிகள் தக்கவைப்படும் வீரர்களின் பட்டியலை அறிவிக்க வேண்டும். இதனால் அந்த பட்டியலை தயார் செய்யும் பணியில் அனைத்து அணிகளும் தீவிரமாக உள்ளன. இதனிடையே CSK அணி டிரேட் மூலம் சஞ்சுவை வாங்க உள்ள நிலையில், 6 வீரர்களை அணியில் இருந்து விடுவிக்க திட்டமிட்டுள்ளது. அதன்படி, கான்வே, திரிபாதி, ஹூடா, ராமகிருஷ்ண கோஷ், குர்ஜப்னீத் உள்ளிட்டோரை விடுவிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
News November 12, 2025
டிகிரி மட்டும் போதும்; வங்கியில் வேலை.!

பேங்க் ஆப் பரோடாவில் Apprentice பணிக்கு 153 காலிப்பணியிடங்கள் உள்ளன. தகுதி: ஏதாவது ஒரு டிகிரி. வயது வரம்பு: 20-28 வயது வரை. ஊதியம்: மாதம் ₹15,000 வரை Stipend. தேர்வு முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, உள்ளூர் மொழி தேர்வு. விண்ணப்ப கடைசி நாள்: 1 பிப்ரவரி 2026. விண்ணப்பிக்கும் முறை: Bank of Baroda அதிகாரப்பூர்வ வலைத்தளம் வழியாக மட்டுமே. வேலை தேடுவோருக்கு SHARE THIS.


