News June 12, 2024

170 மது பாட்டில்கள் பறிமுதல் 12 பேர் கைது

image

தூத்துக்குடி மாவட்ட மதுவிலக்கு போலீசார் மற்றும் உள்ளூர் காவல்துறையினர் நேற்று(ஜூன் 11) மாவட்ட முழுவதும் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்பொழுது பல்வேறு பகுதிகளில் சட்ட விரோதமாக மது பாட்டில்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்த 12 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து 170 மது பாட்டில்களையும் ரூபாய் 7420 பறிமுதல் செய்தனர்.

Similar News

News September 16, 2025

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்த கூட்டம்

image

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் இன்று(15.09.2025), வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் இளம்பகவத், தலைமையில் நடைபெற்றது. உடன் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) ஆர்.ஐஸ்வர்யா, தூத்துக்குடி மாநகராட்சி ஆணையாளர் சி.ப்ரியங்கா என அதிகாரிகள் பலர் பங்கேற்றனர்.

News September 15, 2025

தூத்துக்குடி மாநகர் பகுதிகளில் நாளை மின்தடை

image

தூத்துக்குடி 110/22 KV நகர் துணைமின் நிலையத்தில் நாளை(செப்.16) பராமரிப்பு நடைபெற உள்ளது. இதனால் KV நகர் உபமின் நிலையம் மூலம் மின் விநியோகம் வழங்கப்படும் பகுதிகளான போல்பேட்டை, ஆண்டாள் தெரு, சத்திரம் தெரு, 1, 2ம் கேட், மட்டக்கடை, வடக்கு பீச்ரோடு, ரயில்வே ஸ்டேஷன் ரோடு, எட்டையபுரம் ரோடு, தெப்பகுளம் உள்ளிட்ட இடங்களில் காலை 9 மணி முதல் 4 மணி வரை மின்சார விநியோகம் நிறுத்தபடும்.

News September 15, 2025

குலசை கோவில் நிலம் ஏலம் அறிவிப்பு

image

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலுக்கு பாத்தியப்பட்ட பாண்டீஸ்வரர் கோவில் மற்றும் எழுவரைமுக்கி சாஸ்தா ஐயப்பன் அய்யனார் கோவில் நிலங்கள் வரும் 18ம் தேதி காலை 11:30 மணிக்கு துறை அலுவலர்கள் மூலம் 5 ஆண்டுகளுக்கு ஏலம் விடப்படும் என அறிவிக்கப்பட்டது. எனவே ஏலம் எடுப்பவர்கள் 2000 ரூபாய் முன்வைப்பு தொகை செலுத்தி ஏலத்தில் பங்கேற்கலாம் என கூறப்படுகிறது.

error: Content is protected !!