News June 12, 2024

வேலூரில் புதிய ரேஷன் கார்டு வழங்க நடவடிக்கை

image

வேலூர், காட்பாடி, அணைக்கட்டு, குடியாத்தம், பேரணாம்பட்டு, கே.வி.குப்பம் ஆகிய 5 தாலுகாக்களில் 5,723 பேர் வரை புதியதாக ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பித்துள்ளனர். அனைத்து விண்ணப்பங்களும் அந்தந்த வட்ட வழங்கல் பிரிவில் அனுமதிக்காக உள்ளது. அனுமதி கிடைத்தவுடன், விண்ணப்பித்தவர்களின் விண்ணப்பங்கள் ஆய்வு செய்து, புதிய கார்டுகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.

Similar News

News August 22, 2025

கீழ்கவரப்பட்டில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ முகாம்

image

வேலூர்: கணியம்பாடி ஒன்றியம், கீழ்கவரப்பட்டு அரசு மகளிர் உயர்நிலைப் பள்ளியில் நாளை (ஆக.23) ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ உயர் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற உள்ளது. இதற்கான முன்னேற்பாடுகளை மாவட்ட ஆட்சியர் வி.ஆர்.சுப்புலட்சுமி ஆய்வு செய்தார். இந்த முகாமில் பொதுமக்களுக்கு 17 சிறப்பு மருத்துவர்கள் மூலம் பரிசோதனையும் சிகிச்சையும் அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

News August 22, 2025

வேலூர்: 10th பாஸ் போதும்; போலீஸ் வேலை!

image

வேலூர் இளைஞர்களே POLICE ஆக வேண்டுமா? தமிழ்நாடு சீருடைப் பணியாளர்கள் தேர்வாணையம் (TNUSRB) சார்பில் 3,644 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.18,200 முதல் ரூ.67,100 வரை வழங்கப்படும். விருப்பம் உள்ளவர்கள் <>இங்கே<<>> க்ளிக் செய்து இன்று முதல் செப்.21 வரை விண்ணப்பிக்கலாம். SHARE பண்ணுங்க!

News August 22, 2025

வேலூரில் பொது இடத்தில் மது அருந்திய 7 பேர் கைது.

image

வேலூர், காகிதப்பட்டறை பகுதியில் நேற்று (ஆக.21) ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த வேலூர் வடக்கு காவல் நிலைய காவல்துறையினர், பொது இடத்தில் மது அருந்திக் கொண்டிருந்த கார்த்திக் (32), ஹரிஸ்குமார் (28), ரஞ்சித்குமார் (37), சவுந்தர் (32), சசிக்குமார் (55), விக்னேஷ் (35), மற்றும் ரவி (53) ஆகிய ஏழு பேரைக் கைது செய்தனர்.

error: Content is protected !!