News June 12, 2024

மணல் கொள்ளை: நீர்மட்டம் குறையும் அபாயம்

image

திருவாலங்காடு ஒன்றியம் ஒரத்தூர் பாகசாலை லக்ஷ்மி விலாசபுரம் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் இரவு நேரங்களில் மாட்டுவண்டி, இருசக்கர வாகனங்களில் மணல் கொள்ளை நடப்பதால் கொசஸ்தலை ஆற்றின் வழித்தடம் மாறுவதுடன் நிலத்தடி நீர்மட்டம் குறையும் அபாயம் உள்ளது. கடந்த மூன்று வாரங்களாக மணல் கொள்ளை அதிகரித்துவருகிறது. இது குறித்து திருவள்ளூர் கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Similar News

News July 8, 2025

உள்ளூரில் வங்கி அதிகாரி வேலை

image

பேங்க் ஆப் பரோடா வங்கியில் ‘லோக்கல் பேங்க் ஆபிசர்’ எனப்படும் உள்ளூர் வங்கி அதிகாரி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 2,500 பணியிடங்கள் நிரப்படுகின்றன. தமிழகத்தில் மட்டும் 60 பணியிடங்கள் உள்ளன. ரூ.48,480 – 85,920 வரை . சம்பளம் வழங்கப்படும். தமிழ் தெரிந்திருக்க வேண்டும். டிகிரி இருந்தால் போதும் ஜூலை 24ஆம் தேதிக்குள் இந்த <>லிங்கில் <<>>விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க

News July 8, 2025

விளையாட்டு வீரர்களுக்கு உதவித்தொகை

image

2025 2026 ஆம் ஆண்டு நலிந்த நிலையில் உள்ள திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த விளையாட்டு வீரர்களுக்கான ஓய்வூதிய உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்பங்கள் மாவட்ட ஆட்சியர் மூலம் வரவேற்கப்படுகின்றன. ஜூலை 31ம் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டுமென மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். விபரங்களுக்கு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலகத்தில்7401703482 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

News July 8, 2025

மனை பிரிவுகளுக்கு அனுமதி வழங்க அழைப்பு

image

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து இடங்களிலும் 20.10.2016 க்கு முன் அமைக்கப்பட்ட அனுமதியற்ற மனை பிரிவுகளில் மேற்கண்ட தேதிக்கு முன்பதிவு செய்யப்பட்ட தனி மனைகளுக்கு எந்த காலக்கெடுவும் இல்லாமல் மனு பெறப்பட்டு வரைமுறை செய்து கொடுக்கப்படும் என திருவள்ளூர் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதாப் அறிக்கை மூலமாக தெரிவித்தார். இதனை மக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு தெரிவித்தார்.

error: Content is protected !!