News June 12, 2024
17 வயது சிறுவன் தற்கொலை-தந்தை புகார்

மதுரை தத்தனேரி பகுதியைச் சேர்ந்த ஸ்டாலின் என்பவரது மகன் ஹரிஷ் குமார் 17. பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்று கல்லூரி பயில்வதற்காக தயாராகி வந்த ஹரிஷ் குமார் நேற்று வீட்டின் அருகே உள்ள வேலி மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தனது மகனின் இறப்பிற்கான காரணம் குறித்து விசாரணை நடத்த தந்தை ஸ்டாலின் புகார் அளித்துள்ளார்.
Similar News
News July 11, 2025
மதுரை: குரூப்-4 தேர்வு எழுதுவோர் கவனத்திற்கு

➡️ மதுரை மாவட்டத்தில் நாளை 73,826 பேர் (ஜூலை.12) குரூப்-4 தேர்வு எழுதுகின்றனர்
➡️ தேர்வு எழுத ஹால் டிக்கெட் (HALL TICKET) கட்டாயம்.
➡️ ஆதார், ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அட்டை (ஏதேனும் ஒன்று) அவசியம்.
➡️ BLACK INK BALL POINT பேனாவுக்கு மட்டுமே அனுமதி.
➡️ காலை 9 மணிக்கு முன்னதாக தேர்வறைக்குள் செல்ல வேண்டும்.
➡️ வாட்ச், மோதிரம், பெல்ட் அணிய அனுமதி இல்லை.
➡️ தேர்வு எழுதும் நபர்களுக்கு SHARE பண்ணுங்க.
News July 11, 2025
மதுரையில் ரேஷன் கார்டு குறைதீர் முகாம்

மதுரை மாவட்டத்தில் பொது வினியோக திட்ட சேவைகள் குறித்த மக்கள் குறைதீர் முகாம் வருகிற 12-ம் தேதி குடிமைப் பொருள் வட்டாட்சியர் மற்றும் வட்ட வழங்கல் அலுவலகங்களில் காலை 10மணி முதல் மதியம் 1 மணி வரை நடக்கிறது. இந்த முகாமில் புதிய ரேஷன் கார்டு விண்ணப்பிக்க, கார்டில் பெயர், முகவரி, போன் நம்பர், பெயர் நீக்கம், பெயர் சேர்த்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளலாம். மக்களே, மிஸ் பண்ணிடாதீங்க SHARE பண்ணுங்க.
News July 11, 2025
பத்து சதவீதம் பாதிப்பு இருந்தாலும் பதிவு செய்து பயனடையலாம்

தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகள் மேம்பாட்டுக்காக அரசு பல நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மேலும் உலக வங்கி நிதியுடன் தமிழ்நாடு உரிமைகள் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.அதன்படி மதுரை மாவட்டத்தில் நேற்று முதல் வீடுவீடாக மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு துவங்கியுள்ளது. 10% பாதிப்பு இருந்தாலும் பதிவு செய்து கொள்வர்.தெரிந்த அனைவருக்கும் SHARE பண்ணுங்க.உங்களால் ஒருவர் கண்டிப்பாக பயனடைவார்.