News June 12, 2024
மயிலாடுதுறை போலீசார் நடவடிக்கை

மயிலாடுதுறை காவல் சரக பகுதியில் 16 வயது சிறுமியை உதயகுமார் என்பவர் காதலித்து வந்துள்ளார். இதனை அறிந்த பெற்றோர் உடனடியாக ரஞ்சித் என்பவருக்கு சிறுமியை திருமணம் செய்து வைத்துள்ளனர். இது தொடர்பாக புகாரின் பேரில் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் குழந்தை திருமண தடுப்புச் சட்டம் மற்றும் போக்ஸோ சட்டத்தில் உதயகுமார் , ரஞ்சித் ஆகிய இருவரை இன்று(ஜூன் 11) கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Similar News
News August 18, 2025
மயிலாடுதுறையின் பெயர் காரணம் இதுவா?

பார்வதி தேவியார் மயிலாக வடிவம் எடுத்து காவிரி ஆற்றுத்துறையில் ஆடி சிவபெருமானை வழிபட்டதாக புராணங்களில் குறிப்பிட பட்டுள்ளதால் இப்பகுதி மயிலாடுதுறை என அழைக்கப்படுகிறது. மேலும் 18 ஆம் நூற்றாண்டு வரை “மயூரபுரம்” என்றும் பின்பு “மாயவரம்” என்றும் அழைக்கப்பட்ட இந்நகரம் 1982ல் எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்த போது “மயிலாடுதுறை” என பெயர் மாற்ற அரசாணை வெளியிடப்பட்டது. இத்தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க
News August 18, 2025
மயிலாடுதுறை: கடையில் தீ விபத்து: ஆறுதல் கூறிய எம்எல்ஏ

மயிலாடுதுறை மகாதான வீதியில் நேற்று தனியார் டைலர் கடையில் தீ விபத்து ஏற்பட்டது. இதை அறிந்த மயிலாடுதுறை மாவட்ட திமுக செயலாளர் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினரும் ஆகிய நிவேதா எம் முருகன் நேரில் சென்று பாதிக்கப்பட்டவருக்குஅறிதல் கூறினார். உடன் மயிலாடுதுறை நகர மன்ற தலைவர் என் செல்வராஜ் மற்றும் திமுக முக்கிய நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
News August 17, 2025
மயிலாடுதுறை – தரங்கம்பாடியின் ரயில் சேவை!

மயிலாடுதுறை-தரங்கம்பாடி மீட்டர் கேஜ் ரயில் பாதை, பிரிட்டிஷ் அரசால் 1926-யில் திறக்கப்பட்டது. 36 கிமீ நீளம் கொண்ட இப்பாதை செம்பனார்கோயில், திருக்கடையூர், பொறையார் வழியாக சென்றது. இதன் மூலம் பொதுமக்கள் பெரிதும் பயன்பெற்று வந்தனர். ஆனால் வருவாய் குறைவின் காரணமாக 1986ம் ஆண்டு இந்த சேவை முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. இந்த சேவையை மீண்டும் தொடங்க வேண்டுமென மக்கள் எதிர்பார்க்கின்றனர். இதை ஷேர் பண்ணுங்க.