News June 12, 2024
பிரதமர் மோடியை மக்கள் அங்கீகரித்துள்ளார்கள்

நாடு முன்னேற பிரதமர் மோடிக்கு மக்கள் வாக்களித்துள்ளனர் என்று ஜார்க்கண்ட் மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
ஜனநாயகம் எவ்வளவு வலுவானது என்பதை நடந்து முடிந்த மக்களவைத் தேர்தல் நிரூபித்துள்ளதாக தெரிவித்த அவர், உலகில் மிகப்பெரிய ஜனநாயகம் இந்திய தேசம் தான் என்பது தெள்ளத் தெளிவாக நிரூபிக்கப்பட்டுள்ளது என்றார். அண்ணாமலையால் தமிழகத்தில் பாஜக வளர்ந்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
Similar News
News September 10, 2025
EPS-க்கு கொலை மிரட்டல் விடுக்கவில்லை: உதயநிதி

அதிமுக ஐசியுவில் சென்றுவிடும் என DCM உதயநிதி சொன்னது, தனக்கு கொலை மிரட்டல் விடுப்பது போல் இருப்பதாக EPS தெரிவித்திருந்தார். இதற்கு விளக்கமளித்த உதயநிதி, பாஜகவின் சர்ஜரியால், அதிமுக ஐசியுவில் சேர்க்கப்படும் நிலையில் இருப்பதைதான் அப்படி சொன்னதாகவும், 100 ஆண்டுகள் உடல்நலத்தோடு EPS வாழவேண்டும் எனவும் கூறியுள்ளார். மேலும், ஆம்புலன்ஸுக்கு வழிவிடுபவரே உண்மையான தலைவர் என EPS-ஐ விமர்சித்துள்ளார்.
News September 10, 2025
பாலியல் வழக்கில் பிருத்வி ஷாக்கு ₹100 ஃபைன்!

2024-ல் கிரிக்கெட் வீரர் பிருத்வி ஷா மீது சப்னா கில் என்ற பெண் பாலியல் புகார் அளித்த நிலையில், புகார் தொடர்பாக பதிலளிக்கும்படி பிருத்வி ஷாக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. பலமுறை உத்தரவிட்டும் பதிலளிக்காததால், தற்போது நீதிமன்றம் அவருக்கு ₹100 அபராதம் விதித்துள்ளது. இத்துடன் வரும் டிசம்பர் 16-ம் தேதிக்குள் இந்த வழக்கில் பிருத்வி ஷா பதிலளிக்க வேண்டும் எனவும் மேலும் ஒரு வாய்ப்பையும் வழங்கியுள்ளது.
News September 10, 2025
BREAKING: பெண்களுக்கு ‘ஒரு சவரன் தங்கம்’.. தமிழக அரசு

பெண்களுக்கான ‘தாலிக்கு தங்கம்’ வழங்கும் திட்டத்தை தமிழக அரசு மீண்டும் செயல்படுத்தவுள்ளது. தற்போது தங்கத்தின் விலை கிராமுக்கு ₹10,000-ஐ தாண்டிவிட்டது. இந்நிலையில், செயல்பாட்டில் உள்ள 4 திருமண நிதியுதவி திட்டங்களில் 22 கேரட் ஒரு சவரன் தங்கம் வழங்க அரசு முடிவு செய்துள்ளது. இதன்படி, முதற்கட்டமாக ₹45 கோடி மதிப்பீட்டில், 5,460 தங்க நாணயங்கள் கொள்முதலுக்கு டெண்டர் கோரப்பட்டுள்ளது.