News June 12, 2024

மத்திய அரசு துரோகம் செய்கிறது: தயாநிதி மாறன்

image

வரி பகிர்வில் தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு தொடர்ந்து துரோகம் இழைத்து வருவதாக திமுக எம்.பி தயாநிதி மாறன் விமர்சித்துள்ளார். நிர்மலா சீதாராமன் இந்த முறையாவது மக்கள் நலனுக்காக செயல்பட வேண்டும் என்று கூறிய அவர், நீட் தேர்வு தேசிய பிரச்னையாக மாறியுள்ளதாக குற்றம் சாட்டினார். முன்னதாக, தமிழ்நாட்டுக்கு வரி பகிர்வாக மத்திய அரசு ₹5700 கோடியும், உ.பிக்கு ₹25,069 கோடியும் ஒதுக்கியது குறிப்பிடத்தக்கது.

Similar News

News November 12, 2025

நேரடி வரி வருவாய் ₹12.92 லட்சம் கோடியாக அதிகரிப்பு

image

கடந்த ஏப்ரல் 1 முதல் நவம்பர் 10 வரையிலான, நேரடி வரி வருவாய் தொடர்பான தகவல்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதில், நேரடி வரி வருவாய் 7% அதிகரித்து ₹12.92 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. இது, கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 12.08 லட்சம் கோடியாக இருந்தது. 2025-26 நிதியாண்டில் நேரடி வரி வருவாய் ₹25.20 லட்சம் கோடியாக மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. இது கடந்த ஆண்டை விட 12.7% அதிகமாகும்.

News November 12, 2025

தற்கொலைப்படை தாக்குதலில் இந்தியாவின் சதி: பாக்., PM

image

<<18258662>>பாகிஸ்தானில் கார் வெடித்து<<>> 12 பேர் உயிரிழந்த நிலையில், இது தற்கொலைப்படை தாக்குதல் என அந்நாட்டு PM ஷெபாஸ் ஷெரிஃப் தெரிவித்துள்ளார். இதில் இந்தியாவின் சதி இருப்பதாகவும், ஆப்கனை தளமாக கொண்டு செயல்படும் இந்தியாவின் அடிமையான TTP தீவிரவாதிகளே இந்த தாக்குதலை நடத்தியதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும், பாகிஸ்தானை அழிப்பதையே நோக்கமாகக் கொண்டு இந்தியா செயல்படுவதாகவும் சாடியுள்ளார்.

News November 12, 2025

₹4 கோடிக்கு கார் வாங்கிய அர்ஷ்தீப்!

image

இந்திய கிரிக்கெட் வீரர் அர்ஷ்தீப் சிங், மெர்சிடஸ் பென்ஸ் AMG G63 Wagon மாடல் சொகுசு காரை வாங்கியுள்ளார். இது தொடர்பான புகைப்படங்களை சமூகவலைதளங்களில் அவர் பகிர்ந்துள்ளார். 585 குதிரை திறன் கொண்ட இந்த காரின் விலை ₹4 கோடியாகும். இது, 0-100 kmph வேகத்தை வெறும் 4.3 விநாடிகளில் எட்டும். அர்ஷ்தீப்பின் பவுலிங் வேகத்தை போன்றே காரை வாங்கியுள்ளதாக, நெட்டிசன்கள் வாழ்த்து கூறி வருகின்றனர்.

error: Content is protected !!