News June 11, 2024
இந்து மக்கள் கட்சியில் இருந்து உடையார் நீக்கம்

தமிழகத்தில் கலவரத்தை தூண்டினால் தான் பாஜக வளரும் என்று சர்ச்சையாக பேசிய விவகாரத்தில் இந்து மக்கள் கட்சி மாநில நிர்வாகி உடையார் மீது, 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் கைது செய்துள்ளனர். இதனைத்தொடர்ந்து, அவரது பேச்சுக்கும் கட்சிக்கும் எந்த தொடர்பும் இல்லை. அது அவரது தனிப்பட்ட கருத்து எனக் கூறி, கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்படுவதாக இந்து மக்கள் கட்சி அறிவித்துள்ளது.
Similar News
News September 5, 2025
4 முதல்வர்களுக்கு பாடல் எழுதிய செங்குட்டுவன்

தமிழ்நாட்டின் 4 முதல்வர்களுக்கு பாடல் எழுதிய பெருமை கவிஞர் <<17624214>>பூவை செங்குட்டுவனுக்கு<<>> உண்டு. அண்ணா, கருணாநிதி, ஜெயலலிதாவிற்கு அரசியல் பாடல்களையும், எம்.ஜி.ஆருக்கு சினிமா பாடல்களையும் எழுதியுள்ளார். இவரது கவி திறனுக்காக கடந்த 1980-ல் தமிழ்நாடு அரசு கலைமாமணி விருது அளித்து கௌரவப்படுத்தியது. இதுபோக, கண்ணதாசன் விருது, கவிஞர் திருநாள் விருது, மகாகவி பாரதியார் விருதுகளையும் வாங்கியுள்ளார்.
News September 5, 2025
உக்ரைனுக்கு வரும் வெளிநாட்டு படைகள்.. புடின் எச்சரிக்கை

உக்ரைனுக்கு மற்ற நாடுகள் படைகளை அனுப்பினால், ரஷ்ய ராணுவத்தின் முதல் குறியாக அவை இருக்கும் என புடின் எச்சரித்துள்ளார். ஐரோப்பா உடனான உக்ரைனின் ராணுவ தொடர்பே இப்போருக்கு முக்கிய காரணமாக அமைந்ததாகவும் தெரிவித்துள்ளார். உக்ரைனுக்கு படைகளை அனுப்ப 26 நாடுகள் ஒப்புக் கொண்ட நிலையில், அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இத்தகைய பதற்றங்கள் 3-ம் உலகப் போருக்கான முன்னோட்டமாக பார்க்கப்படுகிறது.
News September 5, 2025
திமுக, அதிமுகவுக்கு எதிராக விஜய் போடும் மெகா பிளான்

திமுக, அதிமுக கூட்டணிகளுக்கு எதிராக முழுவீச்சில் களமாடத் தயாராகி வருகிறார் விஜய். செப்.13-ல் முதல் மக்கள் சந்திப்பை தொடங்க திட்டமிட்டுள்ள அவர், மெகா பிளான் போட்டு வைத்துள்ளாராம். முதல்கட்டமாக 100 தொகுதிகளுக்கு சென்று தேர்தல் பரப்புரை மேற்கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது. விவசாயிகள், பெண்கள், தொழிலதிபர்களை சந்தித்து குறைகளை கேட்டறியவும் அவர் ஏற்பாடு செய்து வருகிறார். விஜய்யின் வியூகம் எடுபடுமா?