News June 11, 2024

மோடியை பிரியங்கா காந்தி வென்றிருப்பார்

image

பிரியங்கா காந்தி மட்டும் வாரணாசி தொகுதியில் போட்டியிட்டிருந்தால், 2 முதல் 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் பிரதமர் மோடியை வென்றிருப்பார் என ராகுல் காந்தி கூறியுள்ளார். உத்தரபிரதேசத்தில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து பேசிய அவர், இதை தான் ஆணவத்தில் கூறவில்லை எனவும், இந்திய மக்கள் பிரதமரின் அரசியலில் மகிழ்ச்சியடையவில்லை என அவருக்கு செய்தி அனுப்பியுள்ளனர் எனவும் ராகுல் காந்தி கூறியுள்ளார்.

Similar News

News September 5, 2025

அடுத்து GST 3.0.. நிர்மலா சீதாராமன் பகிர்ந்த தகவல்

image

சாதாரண மக்களின் சுமைகளை குறைப்பதற்காகவே GST 2.0 கொண்டுவரப்பட்டதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். அதேபோல், வருங்காலத்தில் GST 3.0-ஐ கொண்டு வர இருப்பதாகவும், இதனால் பொருள்களின் விலை மேலும் வெளிப்படைத்தன்மையோடு இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், சிறு, குறு தொழிலாளர்கள் பாதிக்கப்படாத வகையில், GST 3.0 செயல்படுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

News September 5, 2025

4 முதல்வர்களுக்கு பாடல் எழுதிய செங்குட்டுவன்

image

தமிழ்நாட்டின் 4 முதல்வர்களுக்கு பாடல் எழுதிய பெருமை கவிஞர் <<17624214>>பூவை செங்குட்டுவனுக்கு<<>> உண்டு. அண்ணா, கருணாநிதி, ஜெயலலிதாவிற்கு அரசியல் பாடல்களையும், எம்.ஜி.ஆருக்கு சினிமா பாடல்களையும் எழுதியுள்ளார். இவரது கவி திறனுக்காக கடந்த 1980-ல் தமிழ்நாடு அரசு கலைமாமணி விருது அளித்து கௌரவப்படுத்தியது. இதுபோக, கண்ணதாசன் விருது, கவிஞர் திருநாள் விருது, மகாகவி பாரதியார் விருதுகளையும் வாங்கியுள்ளார்.

News September 5, 2025

உக்ரைனுக்கு வரும் வெளிநாட்டு படைகள்.. புடின் எச்சரிக்கை

image

உக்ரைனுக்கு மற்ற நாடுகள் படைகளை அனுப்பினால், ரஷ்ய ராணுவத்தின் முதல் குறியாக அவை இருக்கும் என புடின் எச்சரித்துள்ளார். ஐரோப்பா உடனான உக்ரைனின் ராணுவ தொடர்பே இப்போருக்கு முக்கிய காரணமாக அமைந்ததாகவும் தெரிவித்துள்ளார். உக்ரைனுக்கு படைகளை அனுப்ப 26 நாடுகள் ஒப்புக் கொண்ட நிலையில், அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இத்தகைய பதற்றங்கள் 3-ம் உலகப் போருக்கான முன்னோட்டமாக பார்க்கப்படுகிறது.

error: Content is protected !!