News June 11, 2024
வடக்கு திசையில் “தலை” வைத்து படுக்காதீங்க

ஆன்மிகத்தை பொறுத்தவரை வடக்கு திசையானது, இறை வழிபாட்டுக்குரிய திசையாகவே கருதப்படுகிறது. இந்த வடக்கு திசையில்தான், குரு உபதேசம் பெற முடியும் என்பார்கள். ஈசனின் திருக்கயிலாயமும் வடக்கு புறத்தில்தான் அமைந்துள்ளது. அதனால்தான், வடக்கு திசையில் தலை வைத்து படுக்க கூடாது என்கிறார்கள். அதேபோல் வடக்கு திசை குபேரனுக்கு உரியது. இந்த திசையில் படுத்தால், செல்வமிழந்து வறுமை வரும் என்பது மக்களின் நம்பிக்கை.
Similar News
News September 5, 2025
4 முதல்வர்களுக்கு பாடல் எழுதிய செங்குட்டுவன்

தமிழ்நாட்டின் 4 முதல்வர்களுக்கு பாடல் எழுதிய பெருமை கவிஞர் <<17624214>>பூவை செங்குட்டுவனுக்கு<<>> உண்டு. அண்ணா, கருணாநிதி, ஜெயலலிதாவிற்கு அரசியல் பாடல்களையும், எம்.ஜி.ஆருக்கு சினிமா பாடல்களையும் எழுதியுள்ளார். இவரது கவி திறனுக்காக கடந்த 1980-ல் தமிழ்நாடு அரசு கலைமாமணி விருது அளித்து கௌரவப்படுத்தியது. இதுபோக, கண்ணதாசன் விருது, கவிஞர் திருநாள் விருது, மகாகவி பாரதியார் விருதுகளையும் வாங்கியுள்ளார்.
News September 5, 2025
உக்ரைனுக்கு வரும் வெளிநாட்டு படைகள்.. புடின் எச்சரிக்கை

உக்ரைனுக்கு மற்ற நாடுகள் படைகளை அனுப்பினால், ரஷ்ய ராணுவத்தின் முதல் குறியாக அவை இருக்கும் என புடின் எச்சரித்துள்ளார். ஐரோப்பா உடனான உக்ரைனின் ராணுவ தொடர்பே இப்போருக்கு முக்கிய காரணமாக அமைந்ததாகவும் தெரிவித்துள்ளார். உக்ரைனுக்கு படைகளை அனுப்ப 26 நாடுகள் ஒப்புக் கொண்ட நிலையில், அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இத்தகைய பதற்றங்கள் 3-ம் உலகப் போருக்கான முன்னோட்டமாக பார்க்கப்படுகிறது.
News September 5, 2025
திமுக, அதிமுகவுக்கு எதிராக விஜய் போடும் மெகா பிளான்

திமுக, அதிமுக கூட்டணிகளுக்கு எதிராக முழுவீச்சில் களமாடத் தயாராகி வருகிறார் விஜய். செப்.13-ல் முதல் மக்கள் சந்திப்பை தொடங்க திட்டமிட்டுள்ள அவர், மெகா பிளான் போட்டு வைத்துள்ளாராம். முதல்கட்டமாக 100 தொகுதிகளுக்கு சென்று தேர்தல் பரப்புரை மேற்கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது. விவசாயிகள், பெண்கள், தொழிலதிபர்களை சந்தித்து குறைகளை கேட்டறியவும் அவர் ஏற்பாடு செய்து வருகிறார். விஜய்யின் வியூகம் எடுபடுமா?