News June 11, 2024

மயிலாடுதுறை போலீசார் நடவடிக்கை

image

மயிலாடுதுறை காவல் சரக பகுதியில் 16 வயது சிறுமியை உதயகுமார் என்பவர் காதலித்து வந்துள்ளார். இதனை அறிந்த பெற்றோர் உடனடியாக ரஞ்சித் என்பவருக்கு சிறுமியை திருமணம் செய்து வைத்துள்ளனர். இது தொடர்பாக புகாரின் பேரில் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் குழந்தை திருமண தடுப்புச் சட்டம் மற்றும் போக்ஸோ சட்டத்தில் உதயகுமார் , ரஞ்சித் ஆகிய இருவரை இன்று(ஜூன் 11) கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Similar News

News August 5, 2025

100 ஆண்டுகள் பழமையான கிணறு தூர்வாரும் பணி

image

திருவெண்காடு அருகே மணிக்கிராமத்தில் அமைந்துள்ள முத்துமாரியம்மன் ஆலயத்தில் ஆகஸ்ட் 29ந் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளதால் திருப்பணி வேலைகள் நடைபெறுகிறது. இந்த ஆலயத்தில் உள்ள 100ஆண்டுகள் பழமையான கிணறு துர்ந்து போய் பயன்படுத்த முடியாமல் இருந்த நிலையில் கிணற்றை சுத்தம் செய்து பயன்பாட்டிற்கு கொண்டு வர பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் விரும்பினர். இதனைத் தொடர்ந்து கிணறு தூர்வாரும் பணிகள் நடந்து வருகிறது.

News August 5, 2025

மயிலாடுதுறை: டிகிரி போதும் ரூ.1.5 லட்சத்தில் வேலை!

image

மயிலாடுதுறை இளைஞர்களே, நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பல்வேறு பதவிகளில் காலியாக உள்ள மொத்தம் 126 காலிபணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது. இதில் டிகிரி, பொறியியல், MBA என பல்வேறு பட்டப்படிப்பு படித்தவர்கள் ஆகஸ்ட் 17-ம் தேதிக்குள் இங்கு<> க்ளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். மேலும் இந்த பணிகளுக்கு ரூ.20,000 முதல் ரூ.1.5 லட்சம் வரை தகுதிக்கேற்ப சம்பளம் வழங்கப்படும். இந்த பயனுள்ள தகவலை உடனே SHARE பண்ணுங்க.

News August 5, 2025

மயிலாடுதுறை: இப்படி ஒரு பெயர்களா?

image

மயிலாடுதுறை மாவட்டம் பல வரலாற்று சிறப்புகளை கொண்டுள்ளது. அவ்வாறு உள்ள இம்மாவட்டத்தின் முக்கிய ஊர்கள் முற்காலத்தில் எவ்வாறு அழைக்கப்பட்டது என்பதை காண்போம். மயிலாடுதுறை – மாயவரம், பூம்புகார் – காவிரிப்பூம்பட்டினம், தரங்கம்பாடி – ட்ரான்கேபார், சீர்காழி – பிரம்மபுரம், குத்தாலம் – திருத்துருத்தி, செம்பனார்கோவில் – இந்திரபுரி, மணல்மேடு – நாகநாதபுரம் என அழைக்கப்பட்டது. அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!