News June 11, 2024
ஒரே நாளில் 353 மனுக்களை வழங்கிய பொதுமக்கள்

கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் கிராந்திகுமார் பாடி தலைமையில் பொதுமக்கள் குறைகேட்புக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் பல்வேறு துறை அலுவலா்கள் பங்கேற்ற இந்தக் கூட்டத்தில், முதியோர் உதவித்தொகை, பட்டா மாறுதல், வீட்டுமனைப் பட்டா, அடிப்படை வசதிகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடா்பான 353 மனுக்கள் பெறப்பட்டதாக இன்று ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Similar News
News May 8, 2025
70 வயது மூதாட்டி +2 தேர்வில் தேர்ச்சி

தமிழகம் முழுவதும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. இதில் கோவையைச் சேர்ந்த 70 வயது மூதாட்டி ராணி 600-க்கு 346 மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெற்றுள்ளார். கணவன் இறந்த பிறகு வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி ராணி, வீட்டில் இருந்தே படித்து தேர்ச்சி பெற்றுள்ளார். 70 வயதிலும் படித்து தேர்ச்சி பெற்ற இவரை வாழ்த்தலாம். (SHARE பண்ணுங்க).
News May 7, 2025
கோவை: முக்கிய காவல் அதிகாரிகளின் தொடர்பு எண்கள்!

▶️கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் – 0422-2300600/200/300. ▶️ கோவை கூடுதல் துணை காவல் கண்காணிப்பாளர் 9442643535. ▶️ பொள்ளாச்சி DSP – 8826540639, 04259-224233. ▶️ பெரியநாயக்கன்பாளையம் DSP – 9498193087, 0422-2695590 ▶️ பேரூர் DSP – 9442188727. ▶️கருமத்தம்பட்டி DSP – 9498101183. ▶️மேட்டுப்பாளையம் DSP – 9698541544. ▶️ வால்பாறை DSP – 9003681542, 04253-282820. இதை Share பண்ணுங்க.
News May 7, 2025
இலவச கலைப்பயிற்சி தொடக்கம்

பொள்ளாச்சியில் உள்ள ஜவகர் சிறுவர் மன்றங்களில் கோடைக்கால இலவச கலைப்பயிற்சி மே.1ஆம் தேதி முதல் நடக்கிறது. இதில் 5 வயது முதல் 16 வயதுடைய பள்ளி மாணவர்களுக்கு நடனம், இசை, ஓவியம் உள்ளிட்ட பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. பயிற்சி காலை 10 மணி முதல் 12 மணி வரை நடைபெறும். விருப்பமுள்ள மாணவர்கள் 97515- 28188 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என கலைப் பண்பாட்டு மைய இயக்குனர் நீலமேகன் தெரிவித்துள்ளார்.