News June 11, 2024

பரமக்குடியில் 23 பவுன் நகை மாயம்: நீதிமன்றம் உத்தரவு

image

பரமக்குடி வைகை நகரில் வசிப்பவர் முருகானந்தம் (45) கடந்த 2021ம் ஆண்டு பரமக்குடியிலிருந்து   வீட்டிற்கு சித்தனேந்தல் மலைச்சாமி என்பவர் ஆட்டோவில் சென்றார். அப்போது 23 பவுன் நகைகளுடன் கைப்பையை ஆட்டோவில் விட்டு சென்றுள்ளார். ஆட்டோ டிரைவர் இல்லை என மறுக்கவே முருகானந்தம் ராம்நாடு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். நீதிமன்றம் உத்தரவின்படி எமனேஸ்வரம் போலீசார் இன்று வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

Similar News

News September 12, 2025

அச்சத்தில் ராமநாதபுரம் மக்கள்

image

ராமநாதபுரத்தில் நாளுக்கு நாள் தெருநாய்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தெரு நாய்கள் உணவிற்காக குடியிருப்பு பகுதிகளில் கூட்டமாக திரிகின்றன. சில வெறிபிடித்த நாய்கள் மக்களை தாக்குகின்றன.கோழி, ஆடுகளை கடிப்பதாகவும் புகார் எழுந்துள்ளது. நாய்கள் தொல்லையால் சிறுவர்கள், பெண்கள், பெரியவர்கள் வீட்டை விட்டு வர அச்சப்படுகின்றனர்.உங்க பகுதியில் தெருநாய் அதிகம் உள்ளதா என்பதை SHARE செய்து கீழே பதிவிடுங்கள்.

News September 11, 2025

இராம்நாடு: தவில், நாதஸ்வரம் பயிற்சி பள்ளி சேர்க்கை

image

ராமேஸ்வரத்தில் உள்ள ராமநாதசுவாமி கோயிலில் தொடங்கி நடத்தப்பட உள்ள தவில் நாதஸ்வரம் பயிற்சி பள்ளியில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. 3 ஆண்டுகள் பயிற்சி வழங்கப்படும். இதில் 13 வயது முதல் 20 வயது வரை இப்பயிற்சி பள்ளியில் சேர்த்துக்கொள்ள அனுமதிக்கப்படுவர். ஆண், பெண் என ஆகிய இருபாலரும் இப்பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம். இதில் பயிற்சி பெறும் மாணவர்களுக்கு மாதம் 10 ஆயிரம் ஊக்கதொகையாக வழங்கப்படும்.

News September 11, 2025

ராமநாதபுரம்: பள்ளி வளாகத்தில் கிடந்த தொழிலாளி சடலம்

image

தொண்டி தெற்கு தெருவை சேர்ந்தவர் ஹைதர்அலி 39. சுமை துாக்கும் தொழிலாளி. அப்பகுதியில் உள்ள ரேஷன் கடை உள்ளது.2 மாடி கொண்ட அந்த கட்டடத்தின் மேல் பகுதியில் இருந்து நேற்று முன்தினம் இரவு 12:00 மணிக்கு ஹைதர்அலி கீழே விழுந்தார். அவரது உடல் ரேஷன் கடை அருகே உள்ள அரசு தொடக்கப்பள்ளி வளாகத்தில் கிடந்தது.அதிகாலையில் அந்த பக்கமாக சென்ற சிலர் உடல் கிடப்பதை பார்த்து போலீசுக்கு தெரிவித்தனர்.

error: Content is protected !!