News June 11, 2024

ஊரகப் பகுதிகளில் ‘மக்களுடன் முதலமைச்சர் திட்டம்’

image

ஜூலை 15 முதல் செப்டம்பர் 15 வரை ஊரக பகுதிகளில் ‘மக்களுடன் முதலமைச்சர் திட்டம்’ செயல்படுத்தப்பட உள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இத்திட்டத்தின் மூலம் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு, 15 துறைகள் சார்ந்த மனுக்கள் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட உள்ளது. இம்மனுக்கள் மீது ஆகஸ்ட் 15 முதல் அக்டோபர் 15ஆம் தேதிக்குள் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News September 8, 2025

ராசி பலன்கள் (08.09.2025)

image

➤ மேஷம் – கவலை ➤ ரிஷபம் – வரவு ➤ மிதுனம் – தாமதம் ➤ கடகம் – செலவு ➤ சிம்மம் – ஆதரவு ➤ கன்னி – அசதி ➤ துலாம் – வெற்றி ➤ விருச்சிகம் – வருத்தம் ➤ தனுசு – நன்மை ➤ மகரம் – அமைதி ➤ கும்பம் – செலவு ➤ மீனம் – பயம்.

News September 8, 2025

கேன்சருக்கு மருந்து கண்டுபிடித்த ரஷ்யா

image

Enteromix எனும் கேன்சர் தடுப்பூசியை கண்டுபிடித்துள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ளது. இது கேன்சர் கட்டிகளை முழுவதுமாக அழிக்கும் திறன் கொண்டது எனவும் நுரையீரல், பெருங்குடல், மார்பக புற்றுநோய்களை கட்டுப்படுத்தும் என்றும் கூறப்படுகிறது. பரிசோதனைகளில் 100% வெற்றிகரமான முடிவுகளை கொடுத்துள்ளதாகவும், நேரடி பயன்பாட்டிற்காக அந்நாட்டின் சுகாதார அமைச்சகத்தின் ஒப்புதல் பெற காத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

News September 7, 2025

மக்களுக்காக போராடி உதயநிதி சிறை சென்றாரா? EPS கேள்வி

image

பாமக நிர்வாகி மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டதை சுட்டிக்காட்டி, தமிழகத்தில் வெடிகுண்டு கலாச்சாரம் வந்துவிட்டதாக EPS குற்றஞ்சாட்டியுள்ளார். தமிழகத்தில் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை நடக்காத நாளே இல்லை எனவும், திமுக கம்பெனியின் அடுத்த அதிபராக வர உதயநிதி துடிப்பதாகவும் அவர் சாடியுள்ளார். மேலும், மக்களுக்காக போராடி உதயநிதி ஜெயிலுக்கு போயிருக்கிறாரா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

error: Content is protected !!