News June 11, 2024
கே.ஆர்.பி. அணைக்கு நீர்வரத்து சரிவு

கிருஷ்ணகிரி மாவட்டத்தின் சில பகுதிகளில் நேற்று முன்தினம் பரவலாக மழை பெய்தது. நேற்று காலை நிலவரப்படி மாவட்டத்தில் பதிவான மழை அளவு (மிமீ): பெணுகொண்டாபுரம் 16.2, போச்சம்பள்ளி 8.5, கேஆர்பி டேம் 6.6 என மொத்தம் 31.3 மிமீ மழை பதிவாகி உள்ளது. கேஆர்பி அணைக்கு நேற்று முன்தினம் 397 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை 350 கனஅடியாக சரிந்துள்ளது. அணையிலிருந்து வினாடிக்கு 111கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது.
Similar News
News September 6, 2025
கிருஷ்ணகிரி மாவட்ட காவல் துறை எச்சரிக்கை

SBI அல்லது வேறு ஏதேனும் வங்கி கணக்கின் செயலி போல் WhatsApp – ல் வரும் -.apk File – களை Click செய்து உங்களுடைய வங்கி கணக்கு விவரங்களை உள்ளீடு செய்யாதீர்கள்.
மீறி செய்தால் உங்கள் வங்கி கணக்கில் உள்ள பணத்தை இழப்பீர்கள். இது போன்று ஏமாற்றப்பட்டால் 1930 என்ற இலவச எண்ணை அழைக்கவும். அல்லது www.cybercrime.gov.in என்ற வலைதள முகவரியில் புகாரளிக்கவும்.
News September 6, 2025
கிருஷ்ணகிரி மாவட்ட இரவு ரோந்து காவலர்கள் விவரம் வெளியீடு

கிருஷ்ணகிரி (செப்டம்பர்:6) இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்கள் விவரம் காவல்துறை சார்பில் சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்டது. இரவு நேரங்களில் பெண்கள் குழந்தைகள் பொதுமக்கள் அவசர தேவைக்கு இலவச டோல்ப்ரீ என் 100 அல்லது காவலர்களின் தனிப்பட்ட மொபைல் எண்ணில் தொடர்பு கொண்டு பயனடைய கேட்டுக் கொள்ளப்படுகிறது.
News September 6, 2025
இன்று இரவு காவல் ரோந்து பணி விவரம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று (செப்.6) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.