News June 11, 2024

காஷ்மீரில் 3 தீவிரவாதிகளுக்கு எதிராக தேடுதல் வேட்டை

image

ஜம்மு -காஷ்மீரின் ரீசி பகுதியில் உத்தர பிரதேச யாத்ரீகர்கள் ஏற்றிக்கொண்டு சென்ற பேருந்து மீது ராணுவ வீரர்கள் போல உடையணிந்து வந்து நேற்று முன்தினம் 3 தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் டிரைவர் மீது குண்டுபாயவே, பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்ததில் 9 பேர் பலியாகினர். மேலும் 40 பேர் காயமடைந்தனர். இந்தத் தாக்குதலில் ஈடுபட்ட பாகிஸ்தானைச் சேர்ந்த 3 தீவிரவாதிகளை தேடும் பணி தீவிரபடுத்தப்பட்டுள்ளது.

Similar News

News December 25, 2025

பயிர் இழப்பீடு வழங்குவதில் துரோகம்: அன்புமணி

image

கடந்த ஆண்டில் சேதமடைந்த பயிர்களுக்கு ஓராண்டு கழித்து தற்போது தான் இழப்பீடு வழங்க நிதி ஒதுக்கப்பட்டிருப்பதாக அன்புமணி விமர்சித்துள்ளார். போன ஆண்டுக்கே இழப்பீடு வழங்கப்படாத நிலையில், இந்தாண்டுக்கான பயிர் இழப்பீடு எப்போது வழங்கப்படும் என்பது தெரியவில்லை எனவும் அவர் கூறியுள்ளார். விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்குவதில் திமுக அரசின் அலட்சியமும், துரோகமும் கண்டிக்கத்தக்கவை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

News December 25, 2025

மகாராஷ்டிரா EX அமைச்சர் காலமானார்

image

EX அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான சுருப்சிங் நாயக்(88) உடல்நலக்குறைவால் காலமானார். மகாராஷ்டிராவை சேர்ந்த இவர் 1978 முதல் தொடர்ச்சியாக 8 முறை நவாப்பூர் தொகுதியின் MLA-வாக இருந்துள்ளார். ‘பழங்குடியினரின் சேவகன்’ என சுருப்சிங்கிற்கு Ex PM இந்திரா காந்தி புகழாரம் சூட்டியிருக்கிறார். இவரது மறைவுக்கு காங்கிரஸ் தலைவர்கள், மகாராஷ்டிரா DCM அஜித் பவார் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். #RIP

News December 25, 2025

₹20 செலுத்தினால் ₹2 லட்சம் காப்பீடு; முந்துங்க!

image

பிரீமியம் கட்ட பணம் இல்லை என்பதால் விபத்து காப்பீட்டை தொடங்காமல் இருக்கீங்களா? PM சுரக்‌ஷா பீம யோஜனா திட்டத்தில், ஆண்டுக்கு ₹20 கட்டினால் ₹2 லட்சம் வரை காப்பீடு தொகையாக பெறலாம். காப்பீடு எடுக்கும் நபர் விபத்தில் கை, கால்களை இழந்தாலோ அல்லது இறந்தாலோ, குடும்பத்தினருக்கு இந்தப் பணம் கிடைக்கும். அருகில் உள்ள வங்கிக்கு சென்று இதற்கு விண்ணப்பியுங்கள். SHARE.

error: Content is protected !!