News June 10, 2024
2.Oவில் கற்ற பாடம் 3.Oவில் கைகொடுக்குமா?

மோடி தலைமையிலான 2.O அமைச்சரவையில் ரயில்வே அமைச்சராக அஸ்வினி வைஷ்ணவ் இருந்தபோது தான், இந்தியாவை உலுக்கிய ஒடிஷா ரயில் விபத்தை தொடர்ந்து, ஆந்திரா உள்ளிட்ட பல இடங்களில் அடுத்தடுத்து விபத்துகள் அரங்கேறின. இதனால், அஸ்வினி வைஷ்ணவ் பதவி விலக வேண்டும் என கோரிக்கையும் எழுந்தது. ஆனால், அதுகுறித்து பாஜக மவுனம் காத்த நிலையில், தற்போது 3.O அமைச்சரவையிலும் ரயில்வே துறை அவருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
Similar News
News September 5, 2025
ஆசிரியர்களுக்காக குரல் கொடுத்த விஜய்

ஆசிரியர்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என விஜய் வலியுறுத்தியுள்ளார். ஆசிரியர்கள் தினத்தை முன்னிட்டு அவர், தனது X தள பதிவில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் அர்ப்பணிப்பு உணர்வோடு ஏற்றமிகு தலைமுறையை உருவாக்கி வரும் ஆசிரியர்களின் நெடுநாள் கோரிக்கைகளை நிறைவேற்றி, அவர்கள் வாழ்வில் ஏற்றம் காண வழிவகை செய்யுமாறு அரசுக்கு விஜய் கோரிக்கை வைத்துள்ளார்.
News September 5, 2025
தமிழக அமைச்சர்களின் சொத்து மதிப்பு இவ்வளவு கோடியா!

TN அமைச்சர்களின் சொத்து பட்டியல் வெளியாகி உள்ளது. R.காந்தி (₹47.94 கோடி), TRB ராஜா (₹41.81 கோடி), பழனிவேல் தியாகராஜன் (₹38.89 கோடி), துரைமுருகன் (₹30.80 கோடி), உதயநிதி (₹29.07 கோடி), எ.வ.வேலு (₹23.32 கோடி), சாமிநாதன் (₹21.07 கோடி), ரகுபதி (₹15.32 கோடி), முத்துசாமி (₹13.68 கோடி) சிவசங்கர் (₹13.55 கோடி) ஆகியோர் முதல் 10 இடத்தில் உள்ளனர். ( ADR REPORT தரவுகளின் அடிப்படையில் சொத்து மதிப்பு)
News September 5, 2025
மும்பையில் 34 இடங்களில் வெடிகுண்டு? உச்சபட்ச அலர்ட்

மும்பையில் தீவிரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக போலீசாருக்கு மெஸேஜ் வந்துள்ளது. லஷ்கர் – இ – ஜிகாதி என அறிமுகப்படுத்தி கொண்ட நபர் அனுப்பிய மெசேஜில், 14 பாக்., தீவிரவாதிகள் ஊடுருவி இருப்பதாகவும், 34 கார்களில் வெடிகுண்டுகள் பொருத்தப்படிருப்பதாவும் கூறப்பட்டுள்ளது. மேலும், 1 கோடி பேரை கொல்ல 400 கிலோ RDX வைக்கப்பட்டுள்ளதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ள நிலையில், போலீசார் உஷார் படுத்தப்பட்டுள்ளனர்.