News June 10, 2024
PM அலுவலக ஊழியர்களுக்கு நேரக்கட்டுப்பாடு கிடையாது

பிரதமர் அலுவலகம் என்பது மோடிக்கானது அல்ல, மக்களின் அலுவலகமாக மாற வேண்டும் என பிரதமர் அலுவலக ஊழியர்கள் மத்தியில் மோடி பேசியுள்ளார். பிரதமர் அலுவலக பணிக்குழுக்களுக்கு நேரக்கட்டுப்பாடோ, சிந்தனைக்கு எல்லையோ இல்லை என்ற அவர், வளர்ந்த இந்தியா என்ற உறுதிப்பாட்டை அடைய அனைவரும் கடினமாக செயலாற்ற வேண்டும் என கேட்டுக்கொண்டார். மேலும், நாட்டை எட்ட முடியாத உயரத்துக்கு கொண்டு செல்ல வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
Similar News
News September 9, 2025
உடல் எடையை குறைக்க இந்த இட்லி தான் பெஸ்ட்!

உடல் எடையை குறையவும், செரிமானம் மேமப்படவும் குதிரைவாலி இட்லி உதவும் என சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.
*குதிரைவாலி அரிசியை தனியாகவும், உளுந்து, வெந்தயத்தை தனியாகவும் 4 மணி நேரம் ஊறவையுங்கள்.
*இவற்றை தனித்தனியாக அரைத்து, ஒன்றாக கலந்து 8 மணி நேரம் வரை புளிக்க வையுங்கள்.
*இந்த மாவில் உப்பு சேர்த்து, இட்லித் தட்டுகளில் ஊற்றினால், ஆவி பறக்க பறக்க இட்லி ரெடி! நண்பர்களுக்கும் Share பண்ணுங்க!
News September 9, 2025
தொடர் ஏறுமுகத்தில் சந்தைகள்.. யார் யாருக்கு லாபம்?

இந்திய பங்குச்சந்தைகள் இன்றும் ஏற்றத்துடன் வர்த்தகத்தை தொடங்கியுள்ளன. சென்செக்ஸ் 263 புள்ளிகள் உயர்ந்து 81,051 புள்ளிகளிலும், நிஃப்டி 74 புள்ளிகள் உயர்ந்து 24,847 புள்ளிகளிலும் வர்த்தகமாகின்றன. TCS, Bajaj Finserv, Tech Mahindra நிறுவனங்களின் பங்குகள் லாபத்தையும், Tata Motors, Shriram Finance உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் சற்று நஷ்டத்தையும் சந்தித்துள்ளன. நீங்க வாங்கிய SHARE லாபம் தந்ததா?
News September 9, 2025
துணை ஜனாதிபதி தேர்வு செய்யப்படுவது எப்படி?

தேர்தல் ஆணையத்தின் மேற்பார்வையில், துணை ஜனாதிபதி தேர்தல், லோக்சபா & ராஜ்யசபா உறுப்பினர்களின் ரகசிய வாக்கெடுப்பின் மூலம் நடத்தப்படும். தேர்தலில் போட்டியிடுபவர் 35 வயதை கடந்தவராகவும் இருக்க வேண்டும். குறைந்தது 20 பரிந்துரையாளர்கள் & 20 ஆதரவாளர்களின் கையொப்பம் & ₹15,000 வைப்பு தொகையை வேட்புமனுவில் வழங்கியிருப்பார். மெஜாரிட்டி பெறுபவர் துணை ஜனாதிபதியாகவும், ராஜ்யசபாவின் தலைவராகவும் தேர்வாகிறார்.