News June 10, 2024
இலங்கை சென்றால் கொன்று விடுவார்கள்: மதுரை ஆதீனம்

பிரதமரை நேரில் சந்தித்து தமிழீழம் கேட்கப்போவதாக, மதுரை ஆதீனம் ஹரிஹர ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரியார் தெரிவித்துள்ளார். இது குறித்து பேட்டியளித்த அவர், தான் தமிழீழம் கேட்பதால் இலங்கை சென்றால் சிங்களவர்கள் தன்னை கொன்று விடுவார்கள் என்றார். இலங்கை தமிழர்களை கொன்றவர்களுக்கு தமிழர்கள் வாக்களித்திருப்பது வருத்தம் எனவும், அதனால்தான், அவர்களால் ஆட்சி அமைக்க முடியவில்லை என்றும் கூறியுள்ளார்.
Similar News
News September 4, 2025
EB இணைப்பு பெயர் மாற்றத்துக்கு புதிய நடைமுறை

விண்ணப்பதாரர்களிடம் இருந்து ஏராளமான ஆவணங்களை கேட்பதால், வீட்டு மின் இணைப்பு பெயர் மாற்றம் செய்ய தேவையற்ற காலதாமதம் ஏற்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு, இனி, முந்தைய உரிமையாளரின் ஒப்புதல் பெறும் படிவம் 2-ஐ நுகர்வோரிடம் இருந்து பெற தேவையில்லை என EB உத்தரவிட்டுள்ளது. அதேநேரம், விற்பனை, பங்கு பிரித்தல், பரிசளித்தல் போன்றவற்றில் விற்பனை பத்திரம், சொத்து வரி ரசீது, ஒப்புதல் கடிதம் சமர்ப்பிக்க வேண்டும்.
News September 4, 2025
கூட்டணி மாற்றம்.. கைகோர்க்க போகும் 4 தலைவர்கள்?

EPS-வுடன் செங்கோட்டையன் மோதலில் ஈடுபட்டு வரும் நிலையில், NDA கூட்டணியில் இருந்து OPS-ஐ தொடர்ந்து, டிடிவியும் விலகியுள்ளார். குறிப்பாக, நாளை காலை 9.15 மணிக்கு அதிமுக தொண்டர்களின் மனநிலை குறித்து மனம் திறந்து பேசும் செங்கோட்டையன், சசிகலா, OPS, டிடிவியை சந்திக்கவும் இருக்கிறாராம். அவரின் நாளைய பேச்சுக்கு பின், தமிழக அரசியலில் மிகப்பெரிய கூட்டணி மாற்றம் நிகழும் என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
News September 4, 2025
Health: டீயுடன் சேர்த்து சிகரெட் பிடிக்கிறீங்களா? ஜாக்கிரதை

புகைப்பிடிப்பது நமது உடலில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தினாலும், அதனை தேநீருடன் சேர்த்து பிடிப்பதால் நோய்களின் வீரியம் மேலும் அதிகரிப்பதாக ஆய்வுகள் சொல்கின்றன. இந்த டீ + சிகரெட் காம்போவால் உணவுக்குழாய் கேன்சர், நுரையீரல் கேன்சர், தொண்டை கேன்சர், இதய நோய், கருவுறாமை / ஆண்மைக்குறைவு, அல்சர், மறதி, பக்கவாதம் ஆகியவை எளிதில் வரும் என டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். Avoid பண்ணுங்க மக்களே. SHARE.