News June 10, 2024

இலங்கை சென்றால் கொன்று விடுவார்கள்: மதுரை ஆதீனம்

image

பிரதமரை நேரில் சந்தித்து தமிழீழம் கேட்கப்போவதாக, மதுரை ஆதீனம் ஹரிஹர ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரியார் தெரிவித்துள்ளார். இது குறித்து பேட்டியளித்த அவர், தான் தமிழீழம் கேட்பதால் இலங்கை சென்றால் சிங்களவர்கள் தன்னை கொன்று விடுவார்கள் என்றார். இலங்கை தமிழர்களை கொன்றவர்களுக்கு தமிழர்கள் வாக்களித்திருப்பது வருத்தம் எனவும், அதனால்தான், அவர்களால் ஆட்சி அமைக்க முடியவில்லை என்றும் கூறியுள்ளார்.

Similar News

News November 11, 2025

சரியான பதிலடி கொடுக்கப்படும்: PM மோடி

image

டெல்லியில் அப்பாவி மக்கள் உயிரிழப்பிற்கு காரணமானவர்கள் நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள் என PM மோடி தெரிவித்துள்ளார். பூடானில் பேசிய அவர், இரவு முழுவதும் அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தியதாக தெரிவித்தார். மேலும், இந்த கோழைத்தனமான தாக்குதலில் ஈடுபட்டவர்களுக்கு சரியான பதிலடி கொடுக்கப்படும் எனவும், சதித்திட்டத்தின் ஆணிவேர் வரை சென்று கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளித்துள்ளார்.

News November 11, 2025

BREAKING: நாளை மத்திய அமைச்சரவைக் கூட்டம்

image

டெல்லி கார் குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக PM மோடி தலைமையில் நாளை அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவுள்ளது. இரு நாள்கள் அரசுமுறை பயணமாக பூடான் சென்றுள்ள PM மோடி நாளை டெல்லி திரும்பியதும், மாலை 5:30 மணிக்கு கூட்டம் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

News November 11, 2025

ஒரு மரணம்… நிலைகுலைந்து போன 8 பேரின் கனவுகள்!

image

டெல்லி குண்டுவெடிப்பு, பல குடும்பங்களை சிதறடித்துவிட்டது. தாய், சகோதரர், மனைவி, 4 குழந்தைகளின் கனவுகளை பூர்த்தி செய்து வந்த அசோக் என்பவரை இன்று அக்குடும்பம் இழந்துவிட்டது. பகலில் பஸ் கண்டக்டராக, இரவில் செக்யூரிட்டியாக ஓயாது உழைத்து கொண்டிருந்தவரின் உயிரை குண்டுவெடிப்பு பறித்துவிட்டது. லோகேஷ் என்ற நண்பரை அழைத்து வர சென்ற பயணம், அசோக்கின் இறுதி பயணமாகிவிட்டது. இந்த கண்ணீருக்கு யார் பதில் சொல்வது?

error: Content is protected !!