News June 10, 2024
கோரிக்கை மனுவை பெற்ற ஆட்சியர்

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர் கூட்டம் இன்று நடைபெற்றது. நாடாளுமன்ற தேர்தல் நடத்தை விதிமுறை காரணமாக 2 மாதங்களுக்கு பின் நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஆட்சியர் சங்கீதாவிடம் மனு அளித்தனர். மேலும் மாற்றுத்திறனாளிடம் நேரில் சென்று மனுக்களை பெற்ற ஆட்சியர் குறைகளை கேட்டறிந்தார்.
Similar News
News September 10, 2025
மதுரை மாவட்டத்தில் புத்தகத் திருவிழா சிந்தனை அரங்கம்

மதுரை மாவட்டத்தில் புத்தகத் திருவிழா 2025 சிறப்பாக நடைபெறுகிறது. செப்டம்பர் 10 ஆம் தேதி மாலை 6 மணிக்கு திமுகக் கலையரங்கம், மதுரையில் சிந்தனை அரங்கம் நடைபெறும். இதில் “எட்டு வழிசாலை” நூலாசிரியர் முத்தையா மரபின் மைந்தன் தலைப்பு உரையாற்றுகிறார். “மெய்ப்பொருள் காண்பது அறிவு” என்ற தலைப்பில் தமிழ் இளவர் மதுரை வி. ராமகிருஷ்ணன் பேசுகிறார். அனைவரும் வருகை தந்து பயனடையுமாறு மாவட்ட நிர்வாகம் அழைக்கிறது.
News September 10, 2025
மதுரை: சிறுவன் தூக்கிட்டு தற்கொலை

மதுரை மாநகர் பாரதிநகர் பகுதியை சேர்ந்தவர் மோகன். இவரது மனைவி கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் உடல் நலக்குறைவால் உயிரிழந்த நிலையில் இவரது இரண்டாவது மகன் பாண்டீஸ்வரன்(16), பள்ளிக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று வீட்டில் யாருமில்லாத நேரத்தில் சிறுவன் பாண்டீஸ்வரன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். உடலை மீட்ட போலீசார் அதற்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.
News September 10, 2025
மதுரை: மேலூர், திருமங்கலம் சாகுபடிக்கு தண்ணீர் திறப்பு

மதுரை மேலூர், திருமங்கலம் ஒருபோக சாகுபடிக்கு செப்டம்பர் 18ம் தேதி வைகையில் இருந்து தண்ணீர் திறக்கப்படும் என நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். மேலூரில் 85 ஆயிரம் ஏக்கருக்குதினமும் 900 கன அடியும், திருமங்கலத்தில் 19,500 ஏக்கருக்கு 230 கன அடி வீதம் மொத்தம் 1130 கன அடி தண்ணீர் திறக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். *ஷேர் பண்ணுங்க