News June 10, 2024

2 ஆயிரம் எருமைகளைத் தத்தெடுத்த ஆவின்

image

தமிழ்நாடு புதுமை முயற்சிகள் திட்டத்தின் கீழ் எருமைகளை தத்தெடுக்க ₹8.2 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ், கொழுப்பு சத்து நிறைந்த பால் உற்பத்தியை மேம்படுத்துவதற்காக சேலம், ஈரோடு உள்ளிட்ட 12 மாவட்டங்களில் உள்ள பால் பண்ணைகளில் இருந்து 2 ஆயிரம் எருமை கன்றுகளை தத்தெடுத்துள்ளது ஆவின் நிறுவனம். தமிழகத்தில் எருமைகளின் எண்ணிக்கை குறைந்த நிலையில், இத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Similar News

News November 11, 2025

மாற்றுத்திறனாளிகளுக்கு ‘வெயிட்டேஜ்’ மதிப்பெண்

image

TN அரசுத்துறைகளில் தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு, போட்டித் தேர்வுகளில் ‘வெயிட்டேஜ்’ மதிப்பெண் வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அரசுத்துறைகளில் பணியாற்றிய ஆண்டுகளின் அடிப்படையில ‘வெயிட்டேஜ்’ மதிப்பெண்கள் வழங்கப்படும். அடுத்த 3 ஆண்டுகளில் நடைபெறும் சி, டி பிரிவு பணியிடங்களுக்கான அரசுப் போட்டித் தேர்வுகளுக்கு இது பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News November 11, 2025

குண்டு வெடிப்புக்கு மோடி, அமித்ஷா பொறுப்பு: திருமா

image

நாட்டின் தலைநகரிலேயே, உயர் பாதுகாப்பு வளையத்துக்குட்பட்ட பகுதியிலேயே காரில் வெடிமருந்தை நிரப்பிக்கொண்டு எப்படி ஊடுருவமுடிந்தது என திருமா கேள்வி எழுப்பியுள்ளார். உள்துறை மற்றும் உளவுத்துறை ஆகியவற்றைத் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ள ‘மோடி-அமித்ஷா-அம்பானி’ கூட்டணி தானே இதற்கு பொறுப்பேற்கவேண்டும் எனவும் பதிவிட்டுள்ளார். மேலும், குற்றவாளிகள் அனைவரையும் கைதுசெய்ய வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

News November 11, 2025

ஒரே அடியாக ₹5,000 உயர்ந்தது

image

வெள்ளி விலை இன்று(நவ.11) கிலோவுக்கு ₹1,000 அதிகரித்துள்ளது. நேற்று காலையில் ₹2,000, மாலையில் ₹2,000 என உயர்ந்திருந்த நிலையில், 2 நாள்களில் மட்டும் ஒரே அடியாக ₹5,000 உயர்ந்துள்ளது. கடந்த மாதம் வரலாறு காணாத புதிய உச்சமாக கிராம் ₹207-க்கும், பார் வெள்ளி கிலோ ₹2,07,000-க்கும் விற்பனையானது. பின்னர், சரிவை சந்தித்துவிட்டு மீண்டும் ஏறுமுகத்தை கண்டுள்ளதால் முதலீட்டாளர்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.

error: Content is protected !!