News June 10, 2024

பேருந்துகளில் இலவசமாக பயணம்

image

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் விழுப்புரம் கோட்டம் சாா்பில் 1040 நகரப் பேருந்துகள் பல்வேறு வழித் தடங்களில் இயக்கப்பட்டு வருகிறது. திருவண்ணாமலை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு கடந்த ஆண்டு வழங்கப்பட்ட பயண அட்டையைக் காண்பித்து நகரப் பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்யலாம் என்று போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Similar News

News July 6, 2025

ரோந்து பணி காவலர்கள் விவரங்கள் வெளியீடு

image

திருவண்ணாமலை மாவட்ட காவல்துறையின் சார்பாக இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ள காவல்துறை அதிகாரிகள் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளது இதன் அடிப்படையில் தங்களுடைய பகுதியில் சட்டத்திற்கு புறம்பாக செயல்படக்கூடிய நபர்கள் இருந்தாலோ அல்லது பாதுகாப்பின்மை பிரச்சனையை ஏற்பட்டாலோ அவர்களுடைய தொலைபேசி எண்கள் (அ) 100 என்ற எண்ணை அழைத்து புகார்களை பதிவு செய்யலாம்.

News July 5, 2025

இந்தியாவை திரும்பிப் பார்க்க வைத்த தி.மலை மாணவி

image

தி.மலை மாவட்டம் தண்டாரம்பட்டு அருகே உள்ள உடையார்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த மாணவி கவிதா, இந்தியாவில் முதல்முறையாக கடல்சார் பல்கலைக்கழகத்தில் இணையும் முதல் பழங்குடியின மாணவி என்ற சாதனையை பெற்று அசத்தியுள்ளார். அரசு பள்ளியில் படித்த இவர் 12ஆம் வகுப்பில் 385 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்று ஆசிரியர்களின் உதவியுடன், உயர்கல்வி வழிகாட்டுதல் முகாமும் மூலம் இந்த வாய்ப்பை பெற்றுள்ளார். ஷேர் பண்ணுங்க.

News July 5, 2025

பத்திரப்பதிவு துறையின் ஆன்லைன் போர்டல் பற்றி தெரிஞ்சிக்கோங்க

image

நிலம்/வீட்டின் பத்திரம் தொலைந்து விட்டால் கவலையே வேண்டாம். தாலுகா அலுவலகம் செல்லாமலே வீட்டில் இருந்தபடியே <>இந்த லிங்க் மூலம் விண்ணப்பித்து பத்திர<<>> நகலை பெற முடியும். பத்திரம் மட்டுமல்லாமல் உங்கள் சொத்து பற்றிய பட்டா, வில்லங்க சான்றிதழ் போன்ற விபரங்களையும் இதில் பெற முடியும். மேலும் தகவலுக்கு (9498452110) & தி.மலை மாவட்ட பதிவாளர் அலுவலகத்தை (04175-223001) அழைக்கலாம். *உறவினர் மற்றும் நண்பர்களுக்கு கட்டாயம் பகிருங்கள்*

error: Content is protected !!