News June 9, 2024
மத்திய அமைச்சரவையில் IAS, IFS அதிகாரிகள்

பிரதமர் மோடி அமைச்சரவையில் 72 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுள்ளனர். இதில் ஒருசில முன்னாள் IAS, IFS அதிகாரிகளும் இடம்பெற்றுள்ளனர். முன்னாள் ரயில்வே அமைச்சரான அஸ்வினி வைஷ்ணவ் ஒடிஷா கேடரில் இருந்து IAS அதிகாரியாகி பாஜகவில் இணையும் முன் ஒடிஷாவில் பணியாற்றியுள்ளார். முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சரான ஜெய் சங்கர் சீனா உட்பட பல நாடுகளில் இந்திய உயர் ஆணையராகப் பணியாற்றியுள்ளார்.
Similar News
News November 11, 2025
சுண்டைக்காய் சாப்பிட்டால் என்ன நன்மைகள்?

நம்ம வீட்டில் அம்மா அடிக்கடி சுண்டைக்காய் வறுவல் அல்லது குழம்பு வைப்பாங்க. சுலபமாக கிடைக்கும் இதில், பல்வேறு நன்மைகள் உள்ளன. நம்ம ஊர்ல இதுக்கு பலரும் அவ்வளவு முக்கியத்துவம் தருவதில்லை. ஆனா இது உண்மையிலேயே எல்லோருடைய வீட்டின் கிச்சன் டேபிளில் இருக்க வேண்டிய ஒன்று. இதன் நன்மைகள் என்னென்ன என்று, மேலே போட்டோக்களில் பகிர்ந்துள்ளோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE
News November 11, 2025
Bussiness Roundup: வீடு விற்பனை மதிப்பு ₹6.65 லட்சம் கோடி

*வாரத்தின் முதல் நாளான நேற்று இந்திய பங்குச்சந்தைகள் ஏற்றத்துடன் வர்த்தகத்தை நிறைவு செய்தன. *கிரெடிட் கார்டு கடன் தொகை ₹2.17 லட்சம் கோடியாக அதிகரிப்பு. *இந்தியாவில் நடப்பாண்டில் வீடு விற்பனை மதிப்பு ₹6.65 லட்சம் கோடியாக உயரும் என எதிர்பார்ப்பு. *அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 6 காசுகள் குறைந்து ₹88.71 ஆனது. *ஒடிஷா, ம.பி., ஆந்திராவில் தங்கம் இருப்பதற்கான ஆதாரங்கள் கண்டுபிடிப்பு.
News November 11, 2025
3 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்

வட உள் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதாக IMD தெரிவித்துள்ளது. அதன்காரணமாக நெல்லை மாவட்ட மலைப்பகுதிகள், தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக மஞ்சள் அலர்ட் விடுத்துள்ளது. அதேபோல், தமிழகத்தில் வரும் 16-ம் தேதி வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை நீடிக்கும் என்றும் தெரிவித்துள்ளது.


