News June 9, 2024
நாளை முதல் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

தூத்துக்குடி மாவட்டத்தில் பாராளுமன்ற தேர்தலையொட்டி கடந்த மார்ச் 16 ஆம் தேதி முதல் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தது. இதனை அடுத்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரம் தோறும் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறாமல் இருந்து வந்தது. தற்பொழுது தேர்தல் நடத்தை விதிமுறைகள் வாபஸ் பெறப்பட்டதை அடுத்து நாளை மீண்டும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது.
Similar News
News September 15, 2025
தூத்துக்குடி: நடத்துனர், ஓட்டுநர்களுக்கு எச்சரிக்கை

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு பெண் ஒருவரை தனியார் பேருந்தில் ஏறக்கூடாது என கூறி நடத்துனர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனைத்தொடர்ந்து போலீசார் தற்போது தனியார் பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளனர். அதில் பயணிகளிடம் வாக்குவாதம் செய்யும் கண்டக்டர், டிரைவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளனர்.ஷேர்!
News September 14, 2025
தூத்துக்குடி மக்களுக்கு போலீசார் எச்சரிக்கை

தற்போது வாட்ஸ்அப்பில் RTO Traffic Challan.apk அல்லது SBI Aadhar Update.apk என்ற பெயரில் தெரிந்த அல்லது தெரியாத நம்பரிலிருந்து பதிவிறக்கம் செய்வதற்கான apk file வந்தால் உடனடியாக அதை தவிர்த்து விடுங்கள். அதை பதிவிறக்கம் செய்தால் உங்கள் புகைப்படங்கள், வங்கி கணக்கில் இருந்து பணத்தை எடுத்துக்கொள்ள நேரிடும். இது போன்ற குற்றங்களில் சிக்கிக் கொண்டால் 1930 என்ற சைபர் குற்றப்பிரிவு எண்ணை அழைக்கலாம்.
News September 14, 2025
தூத்துக்குடி: இந்த வாய்ப்பை MISS பண்ணாதீங்க!

தூத்துக்குடி மக்களே; மத்திய அரசின் புலனாய்வு துறையில் புலனாய்வு அதிகாரிக்கான காலி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணிக்கு B.sc முடித்திருந்தால் போதும். இதற்கு மாதம் ரூ. 25,500 – 81,100 வரை சம்பளம் வழங்கப்படும். 18-27 வயதுடையவர்கள் விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவர்கள் இங்கே <