News June 9, 2024
திருச்சி அருகே தாக்குதல்: 4 பேர் மீது வழக்கு

தொட்டியம் வட்டம் அரங்கூர் முல்லை நகரில் நேற்று பாண்டி என்பவர் வேகமாக டூவீலரில் சென்றுள்ளார். அங்கு இருந்தவர்கள் ஏன் வேகமாக செல்கிறாய் என்று தகாத வார்த்தைகளை பேசியும் குச்சியால் கல்லாலும் தாக்கியுள்ளனர். படுகாயமடைந்த பாண்டி நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தாக்கிய நான்கு பேர் மீது தொட்டியம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Similar News
News September 15, 2025
திருச்சி: TNPSC குரூப் 2, 2ஏ மாதிரி தேர்வு அறிவிப்பு

திருச்சி மாவட்ட மைய நூலகத்தில், டிஎன்பிஎஸ்சி குரூப் 2, குரூப் 2 ஏ போட்டித் தேர்வுகளுக்கான, மாதிரித்தேர்வு இன்று (செப்.,15) காலை 10 மணி முதல் பகல் 1:30 மணி வரை நடைபெற உள்ளது. தேர்வில் முழு பாட பகுதிகளிலிருந்தும் வினாக்கள் இடம்பெறும். இம்மாதிரி தேர்வில் கலந்து கொள்ள கட்டணம் ஏதுமில்லை என திருச்சி மாவட்ட நுாலக அலுவலர் சரவணக்குமார் தெரிவித்துள்ளார்.
News September 15, 2025
திருச்சி: கட்டுமான தொழிலாளர்களுக்கு பயிற்சி

திருச்சி மாவட்டத்தில் தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகம் மூலம் 1650 கட்டுமான தொழிலாளர்களுக்கு, அரசு தொழில்நுட்ப பயிற்சி நிலையங்களில் திறன் மேம்பாட்டு பயிற்சி வரும் 18ஆம் தேதி தொடங்கப்பட உள்ளது. இதில் கலந்து கொள்ள விரும்பும் தொழிலாளர்கள் தங்களது விருப்ப கடிதத்தை மன்னார்புரம் பகுதியில் உள்ள தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகத்தில் நேரில் வந்து வழங்க வேண்டுமென தொழிலாளர் உதவி ஆணையர் தெரிவித்துள்ளார்.
News September 15, 2025
மாவட்ட மைய நூலகத்தில் சிறுவர்கள் கதை எழுத பயிற்சி

திருச்சி மாவட்ட மைய நூலகத்தில் வாசகர் வட்டம் சார்பில், சிறுவர் கதை எழுதும் பயிற்சி இன்று நடைபெற்றது. அதற்கு வாசகர் வட்டத் தலைவர் அல்லிராணி தலைமை வகித்தார். மாவட்ட மைய நூலகர் தனலட்சுமி முன்னிலை வகித்தார். சிறுவர்களுக்கு, சிறார் எழுத்தாளர் கார்த்திகா, சிறுகதை எழுதுவதற்கான பயிற்சி அளித்தார். இதில் 5 முதல் 13 வயதுடைய சிறுவர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்.