News June 9, 2024
நாடாளுமன்றத்தில் குரல் எழுப்புவேன்: ராகுல்

நீட் வினாத்தாள் கசிந்ததை அரசு தொடர்ந்து மறுத்து வருவதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து, அவர் தனது எக்ஸ் பக்கத்தில், நீட் தேர்வு முறைகேடு குறித்து நாடாளுமன்றத்தில் குரல் எழுப்புவேன் என்றும், இளைஞர்களின் குரல் நசுக்கப்படுவதை ஏற்க மாட்டோம் எனவும் தெரிவித்துள்ளார். மேலும் இந்தியா கூட்டணி மீது இளைஞர்கள் நம்பிக்கை வைத்துள்ளதாகவும், முறைகேட்டை அரசு மறுத்து வருவதாகவும் கூறியுள்ளார்.
Similar News
News August 13, 2025
Group Examக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்

TNPSC குரூப் 2, 2ஏ தேர்வுகளுக்காக விண்ணப்பிக்க இன்று கடைசி நாள். இதுவரை தேர்வுக்கு 4.46 லட்சம் பட்டதாரிகள் விண்ணப்பித்துள்ளதாக TNPSC தெரிவித்துள்ளது. இந்த தேர்வுகள் மூலம் காலியாக உள்ள 645 பணியிடங்கள் நிரப்படவுள்ளன. முதல்நிலை தேர்வு செப்டம்பர் 28-ம் தேதி நடைபெறுகிறது. தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க தவறியவர்கள் <
News August 13, 2025
இந்தியா – சீனா விமான சேவை விரைவில் தொடக்கம்

இந்தியா – சீனா நேரடி விமான சேவையை தொடங்க ஏர் இந்தியா, இண்டிகோ விமான நிறுவனங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. கொரோனா மற்றும் அதைத் தொடர்ந்து கல்வான் தாக்குதல் ஆகிய காரணங்களால் இரு நாடுகளுக்கும் இடையேயான விமான சேவை கடந்த 4 ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. தற்போது இரு நாடுகளுக்கும் இடையேயான உறவு மேம்பட்டு வருவதால், அடுத்த மாதம் நேரடி விமான சேவை தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
News August 13, 2025
மும்பை அணியின் கேப்டனாகும் CSK வீரர்

கடந்த IPL சீசனில் CSK-வின் இளஞ்சிங்கமாக களம் கண்ட ஆயுஷ் மாத்ரே, இந்தியா U19 அணியின் கேப்டனாக வழிநடத்தினார். இந்நிலையில், புச்சி பாபு கோப்பை (Buchi Babu Trophy) தொடரில், மும்பை அணியின் கேப்டனாக அவர் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த போட்டிகள் ஆக.18 – செப்.9 வரை சென்னையில் நடைபெறவுள்ளன. சமீபத்தில் நடந்த கிளப் போட்டியில் 48 பந்துகளில் 82 ரன்களை விளாசியிருந்தார் ஆயுஷ்.