News June 9, 2024
நெல்லையில் சார் பதிவாளர் சஸ்பெண்ட்

திருநெல்வேலி மாவட்டம் மாஞ்சோலையில் உச்சநீதிமன்றத்தால் காப்புக் காடாக அறிவிக்கப்பட்ட 8000 ஏக்கர் அரசு நிலத்தை போலி ஆவணம் மூலம் அபகரிக்க முயற்சி செய்ததாக அம்பாசமுத்திரம் சார் பதிவாளர் சாந்தியை பத்திரப்பதிவு ஐஜி ஆலிவர் பொன்ராஜ்
இன்று சஸ்பெண்ட் செய்தார். அரசு நிலத்தை அபகரிக்க முயன்றவர்களுக்கு துணைபோன பதிவு துறை அதிகாரியை சஸ்பெண்ட் செய்த சம்பவம் நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Similar News
News September 15, 2025
முஸ்லிம் லீக் மாநாட்டில் விருது வழங்கி கௌரவிப்பு

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அரசியல் எழுச்சி மாநாடு மேலப்பாளையம் ஜின்னா தியேட்டரில் இன்று நடைபெற்றது. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் காதர் மைதீன், தூத்துக்குடி எம்பி கனிமொழி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். முன்னதாக நெல்லை மாவட்ட முஸ்லிம் லீக் செயலாளர் மற்றும் நிர்வாகிகளுக்கு முஸ்லிம் லீக் சார்பில் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
News September 14, 2025
ஜிஎஸ்டி வரி சீரமைப்பு கருத்தரங்கில் நயினார்

ஜிஎஸ்டி கவுன்சிலுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் நடத்திய ‘வளர்ந்து வரும் பாரதத்திற்கான ஜிஎஸ்டி வரி சீரமைப்பு’ எனும் கருத்தரங்கு இன்று (செப்டம்பர் 14) சென்னையில் நடந்தது. இதில், மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் உரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் எம்எல்ஏ பங்கேற்றார். பாஜக நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.
News September 14, 2025
நெல்லை மக்களே எச்சரிக்கை

தற்போது வாட்ஸ்அப்பில் RTO Traffic Challan.apk அல்லது SBI Aadhar Update.apk என்று தெரிந்த அல்லது தெரியாத நம்பரிலிருந்து பதிவிறக்கம் செய்வதற்கான apk file வந்தால் உடனடியாக அதை தவிர்த்து விடுங்கள். அதை பதிவிறக்கம் செய்தால் உங்கள் புகைப்படங்கள், வங்கி கணக்கில் இருந்து பணம் திருடு போவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது. இதுபோன்ற குற்றங்களில் சிக்கிக் கொண்டால் 1930 என்ற சைபர் குற்றப்பிரிவு எண்ணை அழைக்கலாம்.