News June 9, 2024

மக்கள் நீதிமன்ற முகாம்களில் 6,449 வழக்குகளுக்குத் தீா்வு

image

தேனி, பெரியகுளம், ஆண்டிபட்டி, போடி, உத்தமபாளையம் ஆகிய நீதிமன்றங்களில் தேசிய மக்கள் நீதிமன்ற முகாம் நேற்று (ஜூன்.8) நடைபெற்றது. இதில் நீண்ட காலம் நிலுவையில் இருந்த வழக்குகள் சமாதானம் செய்யக் கூடிய குற்ற வழக்குகள், உரிமையியல் வழக்குகள், விபத்து இழப்பீடு, காப்பீடு, வங்கிக் கடன், காசோலை, ஜீவனாம்சம் உள்ளிட்ட வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. மொத்தம் 6,449 வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டன.

Similar News

News November 7, 2025

தேனி மாவட்ட இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம்

image

தேனி மாவட்டத்தில் இன்று 07.11.2025 இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை தேனி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் சீராளன் தலைமையில் இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. தேவையுள்ளவர்கள் அந்தந்த உட்கோட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பயனடையலாம் எனவும் தெரிவித்துள்ளது.

News November 7, 2025

தேனி: சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்தவருக்கு சிறை

image

ஆண்டிபட்டி தாலுகா பகுதியை சேர்ந்தவர் முருகன் (42). இவர் 2023.அக்.1ல் அப்பகுதியை சேர்ந்த பிளஸ் 1 படிக்கும் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்துள்ளார். கடமலைக்குண்டு போலீசார் முருகனை கைது செய்த நிலையில் இந்த வழக்கு மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் வழக்கின் தீர்ப்பாக நேற்று (நவ.6) முருகனுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி கணேசன் தீர்ப்பளித்தார்.

News November 7, 2025

தேனி: ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு!

image

தேனியில் மாவட்ட பொது விநியோக திட்டத்தின் கீழ் மக்கள் குறைதீா் கூட்டம் நாளை (நவ.8) காலை 10 மணி முதல் 1 மணி வரை அனைத்து வட்ட வழங்கல் அலுவலகங்களிலும் நடைபெறுகிறது. மக்கள் இதில் கலந்து கொண்டு மின்னணு குடும்ப அட்டை விண்ணப்பம், பிழைத் திருத்தம், புகைப்படம் பதிவேற்றம், பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம், கைப்பேசி எண் பதிவுகளிக்கு மனு அளித்து தீர்வு காணலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!