News June 8, 2024

அப்போது 11ஆவது பெயில்… இப்போது துணை ஆட்சியர்…

image

மத்தியபிரதேசத்தில் பிரியால் யாதவ் என்ற விவசாய குடும்பத்தை சேர்ந்த பெண், மாநில பணியாளர் தேர்வாணைய தேர்வில் 6ஆவது இடம் பிடித்து துணை ஆட்சியராக தேர்வாகியுள்ளார். இதில், கவனிக்கத்தக்க சாதனை என்னவெனில், அவர் 11ஆவது வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வி அடைந்தவர். எனினும், விடாமுயற்சியால், 2019இல் மாவட்ட பதிவாளர், 2020இல் கூட்டுறவு துணை ஆணையராக தேர்வான அவர், தற்போது துணை ஆட்சியராகவும் தேர்வாகியுள்ளார்.

Similar News

News August 13, 2025

சினிமாவில் 50 ஆண்டு நிறைவு! ரஜினிகாந்துக்கு EPS வாழ்த்து

image

திரையுலகில் 50 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள ரஜினிகாந்துக்கு EPS வாழ்த்து தெரிவித்துள்ளார். பொன்விழா ஆண்டில் சூப்பர் ஸ்டார் நடிப்பில் நாளை வெளியாகவுள்ள ‘கூலி’ படம் வெற்றியடைய வாழ்த்துவதாகவும் X தளத்தில் அவர் பதிவிட்டுள்ளார். ஏற்கெனவே தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்தும் ரஜினிக்கு வாழ்த்து கூறியிருந்தார். ரஜினிக்கு திரைத்துறை பாராட்டு விழா நடத்த வேண்டும் எனவும் அவர் கோரிக்கை வைத்தார்.

News August 13, 2025

டிசைனிங் ‘ஜாம்பவான்’ குமார் காலமானார்!

image

1000 படங்களுக்கு மேல் பணியாற்றிய போஸ்டர் & டிசைனிங் ‘ஜாம்பவான்’ குமார்(67) உடல்நலக் குறைவால் காலமானார். 1983-ல் வெளியான ‘சலங்கை ஒலி’ படத்தில் தொடங்கி ‘சபாஷ் நாயுடு’ வரை தொடர்ச்சியாக கமலுடன் குமார் பணிபுரிந்துள்ளார். தேவர் மகன், விருமாண்டி, தளபதி, படையப்பா, கில்லி, வல்லவன் என பல Iconic பட போஸ்டர்கள் இவரின் கைவண்ணம்தான். இவரது மறைவுக்கு திரைத்துறையினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். #RIP

News August 13, 2025

தேர்தல் ஆணையத்தை நாடும் அன்புமணி

image

பொதுக்குழு தீர்மானத்தை தேர்தல் ஆணையத்தில் வழங்க அன்புமணி முடிவு செய்துள்ளார். சமீபத்தில் நடந்த பொதுக்குழுவில், அன்புமணியின் பாமக தலைவர் பதவி காலத்தை மேலும் ஓராண்டு நீட்டிக்கப்படுவதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால், இந்த பொதுக்குழு செல்லாது என்று ராமதாஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனால், பொதுக்குழுவால் தலைவராக தேர்வானதை உறுதிப்படுத்த தேர்தல் ஆணையத்தை (EC) அன்புமணி நாடவிருக்கிறார்.

error: Content is protected !!