News June 8, 2024

இந்தியா என்பதும் பாரத் என்பதும் ஒன்றல்ல: ஆளுநர்

image

ஆங்கிலேயே ஆதிக்கத்தை பற்றிய மிகைப்படுத்தல்களும், திராவிட இயக்கங்கள் குறித்த பாடங்களே தமிழகத்தில் உள்ளதாக ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியுள்ளார். கோவையில் நடைபெற்ற கருத்தரங்கில் பேசிய அவர், தமிழகத்தில் தேசிய அளவிலான சுதந்திர போரட்ட தலைவர்கள் பற்றிய பாடங்கள் இல்லை எனவும், இந்தியா என்பது அந்நியர்கள் அடையாளப்படுத்திய வார்த்தை என்றும், இந்தியா என்பதும் பாரத் என்பதும் ஒன்றல்ல எனவும் கூறியுள்ளார்.

Similar News

News December 8, 2025

காஞ்சிபுரத்தில் இன்று 113 பள்ளிகளுக்கு விடுமுறை

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஏகாம்பரநாதர் கோயில் குடமுழுக்கை ஓட்டி இன்று (டிச. 8) 113 பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. அதேபோல் கல்லூரி மாணவர்கள் தொடர்பான அறிவிப்பு இது வரை வெளியாகவில்லை. மாவட்ட நிர்வாகம் சார்பிலும் முக்கிய துறைகள் அனைத்தும் இயங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது . இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

News December 8, 2025

ஃபிரிட்ஜில் இதையெல்லாம் வைக்குறீங்களா? பேராபத்து!

image

நறுக்கிய காய்கறி மற்றும் பழங்களை ஃபிரிட்ஜில் வைக்க வேண்டாம். ஃபிரிட்ஜின் கூலிங்கான நிலை, கிருமிகள் பரவவும், அவை வெகு நேரம் உயிர்வாழ்வதற்கான உகந்த சூழலையும் அளிக்கிறது. எனவே நறுக்கி வைத்திருக்கும் பழங்களில் நிச்சயமாக கிருமிகள் பரவியிருக்கும். இதை நீங்கள் சாப்பிட்டால், தொற்று ஏற்பட்டு, ஃபீவர், ஃபுட் பாய்சன் கூட ஆகலாம் என டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். விழிப்புணர்வுக்காக அனைவருக்கும் SHARE IT.

News December 8, 2025

கோவா தீ விபத்து: 4 பேர் கைது, 3 அதிகாரிகள் சஸ்பெண்ட்

image

<<18492944>>கோவா தீ விபத்து<<>> தொடர்பாக, விடுதி நிர்வாகத்தை சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். விசாரணையில், தீ பாதுகாப்பு விதிகளை இரவு விடுதி பின்பற்றவில்லை என்பது தெரியவந்தது. இதையடுத்து, பாதுகாப்பு விதிமீறல்களை கண்டுகொள்ளாமல் அனுமதி அளித்த 3 அரசு அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். சம்பவம் குறித்த முழு அறிக்கையை விசாரணைக்குழு ஒருவாரத்தில் சமர்ப்பிக்கும் என CM பிரமோத் சாவந்த் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!