News June 8, 2024

சுடுகாட்டில் தண்ணீர் இல்லாததால் அவதி

image

மயிலாடுதுறை நகராட்சிக்கு உட்பட்ட தீப்பாய்ந்தாள் அம்மன் கோவில் அருகில் எரிவாயு தகன மேடை சுடுகாடு அமைந்துள்ளது. இங்கு கடந்த ஒரு மாத காலமாக தண்ணீர் இன்றி துக்க விட்டார்கள் பெரும் அவதிப்படுவதாக தெரிவித்துள்ளனர். இதனால் இறுதிச்சடங்கு செய்ய முடியாத சூழல் இருப்பதால் போதிய அளவு தண்ணீரை நகராட்சி நிர்வாகம் வழங்க வேண்டும் என இன்று பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Similar News

News August 19, 2025

உங்களுடன் ஸ்டாலின் முகாம் தேதிகள் அறிவிப்பு

image

மயிலாடுதுறையில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் கடந்த ஜூலை முதல் கட்டமாக நடைபெற்று முடிந்தது. இந்நிலையில் தற்போது மயிலாடுதுறையில் இரண்டாம் கட்ட முகாம் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அந்த வகையில், ஆகஸ்டு 21, 22 மற்றும் செப்டம்பர் 6, 10, 11 ஆகிய தேதிகளில் மயிலாடுதுறையில் முகாம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பினை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News August 19, 2025

ஐஓபி வங்கி சார்பில் இலவச பயிற்சி வகுப்புகள்

image

மயிலாடுதுறை பட்டமங்கலம் தெருவில் உள்ள ஐஓபி வங்கி, ரூரல் செல்ஃப் எம்பிளாய்மென்ட் ட்ரைனிங் இன்ஸ்டிட்யூட் உடன் இணைந்து, தையல், அழகுக்கலை, ஓட்டுநர் பயிற்சி மற்றும் கைபேசி சரிபார்த்தல் போன்ற பல இலவச பயிற்சி வகுப்புகளை நடத்துகிறது. மதிய உணவுடன் வழங்கப்படும் இந்த அரிய வாய்ப்பை, ஆர்வமுள்ளோர் பயன்படுத்திக்கொள்ளலாம். இந்த வகுப்புகள் குறித்த கூடுதல் விவரங்களுக்கு, மயிலாடுதுறை ஐஓபி வங்கியைத் தொடர்புகொள்ளலாம்.

News August 19, 2025

மயிலாடுதுறை இரவு ரோந்து பணி போலிசாரின் விவரங்கள் வெளியீடு

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று (ஆகஸ்ட் 18) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. மயிலாடுதுறை குத்தாலம் சீர்காழி செம்பனார்கோயில் உள்ளிட்ட பகுதிகளில் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டுள்ள போலீசாரின் தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டு குற்ற நடவடிக்கைகள் குறித்து பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

error: Content is protected !!