News June 8, 2024
ஒரு கோடி மொபைல் எண்கள் சரிபார்ப்பு

‘எமிஸ்’ இணையதளத்தில், பதிவான ஒரு கோடிக்கும் அதிகமான மாணவர்களின் பெற்றோரது மொபைல் எண்கள் சரிபார்க்கப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. அரசின் நலத்திட்டங்கள் குறித்து பெற்றோர்களுக்கு தெரிவிக்க ‘எமிஸ்’ உருவாக்கப்பட்டுள்ளது. இதில், பதிவு செய்யாதவர்களின் எண்களை குறிப்பிட்ட ஆசிரியர்கள் பள்ளி திறக்கும் நாளன்று கேட்டு பதிவு செய்ய வேண்டும் என்றும் பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.
Similar News
News September 24, 2025
கலைமாமணி விருதின் பரிசுத்தொகை, சலுகைகள்

தமிழக அரசின் இயல், இசை, நாடக மன்றத்தால் வழங்கப்படும் கலைமாமணி விருது பெறுவோருக்கு 3 சவரன் தங்கப் பதக்கமும், விருது பட்டயமும் வழங்கப்படும். பாரதியார், எம்.எஸ்.சுப்புலட்சுமி, பால சரசுவதி ஆகியோரது பெயரில் அகில இந்திய விருது பெறுபவர்களுக்கு ₹1 லட்சம் பரிசுத் தொகைக்கான காசோலையுடன், 3 சவரன் தங்கப் பதக்கம் வழங்கப்படும். இவர்கள் அனைவரும் தமிழ்நாடு அரசு பேருந்துகளில் கட்டணமில்லா பயணம் செய்யலாம்.
News September 24, 2025
FLASH: செங்கோட்டையன் – டிடிவி தினகரன் சந்திப்பு

சென்னையில், செங்கோட்டையனை நேரில் சந்தித்து TTV தினகரன் தனது ஆதரவை தெரிவித்தார். அடையாறில் உள்ள டிடிவி தினகரனின் இல்லத்தில் சுமார் 1 மணிநேரம் நடைபெற்ற இந்த சந்திப்பின்போது, டெல்லியில் அமித்ஷா, நிர்மலா சீதாராமன் ஆகியோருடன் பேசியது குறித்து செங்கோட்டையன் எடுத்துரைத்ததாக கூறப்படுகிறது. NDA கூட்டணியில் EPS-ஐ முதல்வர் வேட்பாளராக ஏற்க முடியாது என டிடிவி தினகரன் கூறி வருவது கவனிக்கத்தக்கது.
News September 24, 2025
தமிழ் சினிமா இயக்குநர் காலமானார்.. நேரில் அஞ்சலி

உடல்நலக்குறைவால் உயிரிழந்த <<17811560>>இயக்குநர் நாராயண மூர்த்தியின்<<>> உடல் பம்மலில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. லண்டனில் உள்ள அவரது மகன் யோகேஷ்வரன் சென்னை திரும்பியதும், நாளை மறுநாள் இறுதிச் சடங்குகள் நடைபெறும் என அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர். நாராயண மூர்த்தி உடலுக்கு ‘மனதை திருடிவிட்டாய்’ படக்குழு, ‘நந்தினி’, ‘அன்பே வா’ சீரியல் பிரபலங்கள் பலரும் நேரில் அஞ்சலி செலுத்தினர். #RIP