News June 8, 2024
சந்திரபாபு நாயுடுவின் முதல் உத்தரவு

ஆந்திர முதல்வராக வருகிற 12ஆம் தேதி சந்திரபாபு நாயுடு பதவி ஏற்க உள்ளார். இந்த நிலையில், தன்னால் பொதுமக்களுக்கு எவ்வித இடையூறும் ஏற்பட கூடாது என தனது பாதுகாப்பு அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார். தான் செல்லும் போதும், வரும்போதும், சாலைகளின் இருபுறமும் மக்களை நிற்க வைப்பது, கடைகளை மூட சொல்வது போன்ற எந்த ஒரு இடையூறும் இருக்க கூடாது. போக்குவரத்து பாதிப்பு ஏற்படக் கூடாது எனவும் உத்தரவிட்டுள்ளார்.
Similar News
News August 10, 2025
ஊழியர்களை பில்லியனர்கள் ஆக்கினேன்: Nvidia CEO

தனது நிறுவனத்தில் வேலை செய்யும் 42,000 ஊழியர்களின் சம்பளம், Comp. Off என அனைத்தையும் மதிப்பாய்வு செய்வதாக Nvidia CEO ஜென்சன் ஹுவாங் தெரிவித்துள்ளார். பரபரப்பான வேலைகளுக்கு மத்தியிலும் ஒவ்வொரு மாதமும் இதற்கென தனியாக நேரம் ஒதுக்குவதாகவும், வேறு எந்த நிறுவனத்தை விடவும் தனது நிர்வாக குழு ஊழியர்களை அதிகளவில் பில்லியனர்கள் ஆக்கியது நான் தான் என்றும் அவர் கூறியுள்ளார்.
News August 10, 2025
நெல்சன் மண்டேலா பொன்மொழிகள்

*ஞானிகள் அமைதியாக இருக்கும்போது முட்டாள்களின் எண்ணிக்கை பெருகும். *செய்து முடிக்கும் வரை மட்டுமே அது சாத்தியமற்றதாகத் தோன்றும். *என் வெற்றியை வைத்து என்னை மதிப்பிடாதீர்கள். எத்தனை முறை கீழே விழுந்து மீண்டும் நான் எழுந்தேன் என்பதை வைத்து என்னை மதிப்பிடுங்கள். *நம்பிக்கை ஒரு சக்திவாய்ந்த ஆயுதம், அதை உங்களிடமிருந்து பறிக்கக்கூடிய சக்தி, இந்தப் பூமியில் யாரிடமும் இல்லை.
News August 10, 2025
அடுத்த சேவாக் இவர் தான்: கிளார்க்

இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு பிறகு இந்திய அணி அடுத்த சேவாக்கை கண்டுபிடித்துவிட்டதாக முன்னாள் ஆஸ்திரேலிய அணி கேப்டன் மைக்கேல் கிளார்க் தெரிவித்துள்ளார். ஜெய்ஸ்வால் சேவாக்கை போல் நிறைய சாதிப்பார் எனவும், அவரது பேட்டிங் திறன், ஆதிக்கம் தனக்கு அதையே நியாபகப்படுத்துவதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், ஜெய்ஸ்வால் களத்தில் இருப்பது எதிரணியினருக்கு கலக்கத்தை ஏற்படுத்தும் என்றும் தெரிவித்துள்ளார்.