News June 8, 2024
காலை உணவு ஏன் சாப்பிட வேண்டும்?

பரபரப்பான இன்றைய வாழ்க்கைச் சூழலில், பலர் தங்களது காலை உணவை உட்கொள்ளாமல் தியாகம் செய்து வருகின்றனர். காலை உணவை கட்டாயம் தவிர்க்கக் கூடாது. இது பற்றி ஜான்ஸ் ஹாப்கின்ஸ் அறிக்கைபடி, காலை உணவை உண்பது மூளையின் ஆற்றலை அதிகரிக்க உதவும். மேலும், காலை உணவு மூளைக்கு குளுக்கோஸ் வழங்குவது போன்றது. நமது மூளை சரியாக இயங்க காலை உணவு அவசியமானது. இதனால் நினைவாற்றல் மற்றும் செறிவுத் தன்மை அதிகரிக்கும்.
Similar News
News December 6, 2025
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

நாமக்கல் மாவட்டத்தில் எஸ்.ஐ.ஆர் பணி நடைபெற்று வருகிறது. இதன் தொடர்ச்சியாக நாமக்கல் மாவட்டத்தில் 1 கோடியே 46 லட்சத்து 660 வாக்காளர்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை, மாவட்ட நிர்வாகத்திடம் வழங்கினர். அவ்வாறு பூர்த்தி செய்யப்பட்ட படிவங்கள் அனைத்தும் மின்னணு மயமாக்கும் பணியில், நாமக்கல் மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டு வருகிறது என, நாமக்கல் மாவட்ட ஆட்சியர் துர்காமூர்த்தி தெரிவித்துள்ளார்.
News December 6, 2025
மாரடைப்பு ஏற்பட்டால் உடனே இதை செய்யுங்க

மாரடைப்பு என்பது சமீபகாலங்களில் எல்லா வயதினருக்கும் ஏற்படுகிறது. ஒருவருக்கு மாரடைப்பு ஏற்படும்போது, நெஞ்சில் கடுமையான வலி, மூச்சுத் திணறல், மயக்கம், அதிகப்படியான வியர்வை போன்றவை இருக்கும். இதுபோன்ற சுழலில் நீங்கள் தனியாக இருந்தால், உடனடியாக என்ன செய்ய வேண்டும் என்று, மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE.
News December 6, 2025
விஜய் கட்சியில் மற்றொரு தலைவர் இணைகிறாரா?

திமுக உடனான கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சித்ததாக, பிரவீன் சக்ரவர்த்தி மீது காங்., தலைமை விரைவில் நடவடிக்கையை எடுக்க உள்ளதாக தகவல் கசிந்துள்ளது. இதனால், தவெகவில் இணைய அவர் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. 2024 லோக்சபா தேர்தலில், மயிலாடுதுறையில் சீட் கிடைக்காததற்கு திமுகவின் தலையீடே காரணம் என அதிருப்தியில் இருந்த <<18476742>>பிரவீன்<<>>, சமீபத்தில் விஜய்யை சந்தித்து பேசினார்.


