News June 8, 2024
சாதித்த IAS: சறுக்கிய IPS

கர்நாடகாவில் உயர் பதவியில் இருந்த 2 தமிழர்கள், ஒரே நேரத்தில் (2019) அரசியலில் குதித்தனர். இதில், சசிகாந்த் செந்தில் Ex IAS காங்கிரஸிலும், அண்ணாமலை Ex IPS பாஜகவிலும் இணைந்தனர். இந்த நிலையில், மக்களவைத் தேர்தலில் திருவள்ளூரில் போட்டியிட்ட சசிகாந்த் வெற்றி பெற்றார். கோவை தொகுதியில் அண்ணாமலை, 2ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டார். இதன் மூலம் சத்தமில்லாமல் சசிகாந்த் சாதித்ததாக நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.
Similar News
News December 6, 2025
அவர்களின் இலக்கு நேரு அல்ல: சோனியா காந்தி

சுதந்திர போராட்டத்தில் எந்த பங்களிப்பையும் செய்யாதவர்கள், நேருவை நாட்டின் எதிரியாக கட்டமைக்க ஆளுங்கட்சி முயற்சிப்பதாக சோனியா காந்தி சாடியுள்ளார். நேருவை வரலாற்றில் இருந்து நீக்குவது அவர்களது முக்கிய இலக்கு அல்ல. அவர் ஏற்படுத்திய சமூக, பொருளாதார, அரசியல் கட்டமைப்புகளை சிதைப்பதுதான் இலக்கு. நேருவை ஆக்கப்பூர்வமாக விமர்சிப்பது என்பது வேறு, இது வேறு என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
News December 6, 2025
பாடங்களுடன் கலையையும் கற்பிக்க வேண்டும்: அன்புமணி

<
News December 6, 2025
திங்கள்கிழமை பள்ளிகள் இங்கு விடுமுறை

ஏகாம்பரநாதர் கோயில் குடமுழுக்கையொட்டி, டிச.8-ம் தேதி (திங்கள்கிழமை) காஞ்சிபுரம் மாநகரத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அந்நாளில், அங்குள்ள 113 பள்ளிகள் செயல்படாது என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார். அதேநேரத்தில், தமிழகத்தில் டிச.12 வரை மழை நீடிக்கும் என IMD தெரிவித்துள்ளது. மழைப்பொழிவை பொறுத்து பிற மாவட்டங்களுக்கும் விடுமுறை அளிக்க வாய்ப்புள்ளது.


