News June 8, 2024
பிசிசிஐ முடிவுக்கு பதிலடி தர விரும்பினேன்

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் வருடாந்திர ஒப்பந்தத்தில் இருந்து நீக்கப்பட்டது குறித்து இந்திய அணி வீரர் ஷ்ரேயஸ் ஐயர் பிசிசிஐ மீது குற்றம் சாட்டியுள்ளார். நேர்காணல் ஒன்றில் பேசிய அவர், ரஞ்சி கோப்பையில் விளையாடமல் போனதால் தான் ஒப்பந்தத்தில் இடம்பெறவில்லை என்றும், அதற்காகவே ரஞ்சி மற்றும் ஐபிஎல் கோப்பைகளை வென்று பிசிசிஐ எடுத்த முடிவுக்கு பதிலடி கொடுக்க முடிவு செய்ததாகவும் தெரிவித்துள்ளார்.
Similar News
News September 24, 2025
வயிற்று கொழுப்பு குறைய இந்த யோகா பண்ணுங்க!

உத்தான பாதாசனம் செய்வதால் செரிமான உறுப்புகள் வலிமையடைந்து, மலச்சிக்கல் பிரச்னை நீங்குவதுடன், வயிற்று கொழுப்பும் குறையும் ✦2 கால்களும் சேர்ந்து வைத்து, மல்லாந்து படுக்கவும் ✦கால்களை மடக்காமல் மேலே உயர்த்தவும். முடிந்தவரை உயர்த்தினால் போதும் ✦2 கைகளையும் உடலுக்கு பக்கத்தில்(படத்தில் உள்ளது போல) வைக்கவும் ✦இந்த நிலையில், 10- 20 விநாடிகள் இருந்துவிட்டு மீண்டும் பழைய நிலைக்கு திரும்பவும். SHARE IT.
News September 24, 2025
யுவராஜ் சிங்கிடம் 7 மணி நேரம் ED விசாரணை

ஆன்லைன் சூதாட்டத்தை விளம்பரங்கள் வாயிலாக ஊக்குவித்த பிரபலங்களை ED விசாரித்து வருகிறது. கிரிக்கெட் வீரர்கள் ரெய்னா, உத்தப்பா உள்ளிட்டோரிடமும் ஏற்கெனவே விசாரணை நடத்தப்பட்டுள்ளது. அந்த வரிசையில் நேற்று யுவராஜ் சிங்கிடம் கிட்டத்தட்ட 7 மணி நேரம் ED அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர். யுவராஜ் அளித்த பதில்களை ED வாக்குமூலமாக பதிவு செய்துள்ளது. பாலிவுட் நடிகர் சோனு சூட் இன்று ED முன் ஆஜராக உள்ளார்.
News September 24, 2025
புரட்டாசி 3-ம் நாள்: இந்த மந்திரத்தை சொல்லுங்கள்!

நவராத்திரியின் 3-ம் நாளில் இந்த வாராஹி மந்திரத்தை சொல்லுங்கள்.
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் வாராஹி தேவ்யை நம:
க்லீம் வாராஹிமுகி ஹ்ரீம் ஸித்திஸ்வரூபிணி ஸ்ரீம்
தனவ சங்கரி தனம் வர்ஷய ஸ்வாஹா.
பொருள்:
செல்வ வளத்தையும், பாதுகாப்பையும், கவர்ச்சி & ஈர்ப்பு சக்தி தருபவளுமான வாராஹி தேவியை வணங்குகிறேன். அவர் எல்லா சித்திகளின் உருவமாக இருக்கிறார். என் தடைகள் அனைத்தும் நீங்கி, சுபீட்சம் பொங்கட்டும். SHARE.