News June 7, 2024
வந்தே பாரத் ரயில் மீது கற்களை வீசி தாக்குதல்

திருச்சூரில் வந்தே பாரத் ரயில் மீது கற்கள் வீசப்பட்டதில், ரயிலின் சி2 மற்றும் சி4 பெட்டிகளின் கண்ணாடி உடைந்து சேதமடைந்தது. இந்த சம்பவம் ரயில் பயணிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், தாக்குதல் நடத்திய நபரை ரயில்வே போலீசார் கைது செய்தனர். விசாரணையில் அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என தெரியவந்துள்ளது. இதற்கு முன்பும், கேரளாவில் வந்தே பாரத் ரயில் மீது கற்களை வீசிய சம்பவம் நடந்துள்ளது.
Similar News
News August 9, 2025
கவர்னர் இல.கணேசனுக்கு ICU-வில் சிகிச்சை

வீட்டில் கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயங்களுடன் நேற்று அப்போலோ ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்ட நாகாலாந்து கவர்னர் இல.கணேசனுக்கு ICU-வில் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நரம்பியல் மற்றும் இதயவியல் டாக்டர்கள் கொண்ட சிறப்புக் குழுவினர் தொடர்ந்து கண்காணித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. பாஜக Ex தலைவரான இல.கணேசன் உடல்நிலை குறித்து மத்திய அரசு சார்பில் கேட்டறிந்ததாகவும் கூறப்படுகிறது.
News August 9, 2025
‘ராமதாஸுக்கு நல்ல புத்தியை கொடுக்கணும் கடவுளே! ‘

மாமல்லபுரத்தில் பாமக பொதுக்குழு இன்னும் சற்றுநேரத்தில் தொடங்கவுள்ளது. தற்போது பொதுக்குழுவில் பங்கேற்க வந்த பொதுக்குழு உறுப்பினர்களிடம் கையெழுத்து வாங்கப்படுகிறது. இவை அனைத்தும் வீடியோவாகவும் பதிவு செய்யப்படுகிறது. இதற்கிடையில், ‘பொதுக்குழு நடக்கும் இடத்தில் ராமதாஸுக்கு நல்ல புத்தியை கொடுக்கணும் கடவுளே!’ என்று பாமகவினர் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.
News August 9, 2025
NEP விதி; SEP மதி: அன்பில் மகேஸ் விளக்கம்

தேசிய கல்விக் கொள்கை(NEP) விதி, ஆனால் மாநிலக் கல்விக் கொள்கை(SEP) மதி என அமைச்சர் அன்பில் மகேஸ் விளக்கம் அளித்துள்ளார். NEP-யை காப்பி அடித்து SEP உருவாக்கப்பட்டுள்ளதாக பாஜக தலைவர்கள் விமர்சித்து வரும் நிலையில், ஒரு சில திட்டங்களின் சாயல்கள் ஒன்றாக இருந்தாலும் அதன் செயல்பாடுகள் வேறு என அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார். மேலும், பிற்போக்குத்தனமான செயல்பாடுகளுக்கு ஒருபோதும் இடமில்லை என மறுத்துள்ளார்.