News June 7, 2024

எதிர்க்கட்சிகளால் 2029இல் ஆட்சியைப் பிடிக்க முடியாது

image

பிரதமர் பதவிக்கு மோடியின் பெயரை பிஹார் முதல்வரும் ஜேடியு தலைவருமான நிதிஷ்குமார் முன்மொழிந்துள்ளார். பிஹாரில் நிலுவையில் உள்ள பணிகளை முடித்துத் தர வேண்டும் என வலியுறுத்திய அவர், எதிர்க்கட்சிகளால் 2029இல் ஆட்சியைப் பிடிக்க முடியாது என்றார். NDA கூட்டணியில் எந்த பிளவும் ஏற்படவில்லை என்று தெளிவுப்படுத்தி அவர், மோடியின் தலைமையில் தொடர்ந்து ஒன்றிணைந்து செயல்படுவோம் எனத் தெரிவித்தார்.

Similar News

News September 8, 2025

சுவாமி விவேகானந்தர் பொன்மொழிகள்

image

*அடிமைகளின் குணமாகிய பொறாமையை முதலில் அழித்துவிடு. *உனக்குத் தேவையான எல்லா வலிமையும், உதவியும் உனக்குள்ளேயே உள்ளன. *உடல் பலவீனத்தையோ, மன பலவீனத்தையோ உண்டாக்கும் எதையும் அணுகக் கூடாது. *நான் இப்போது இருக்கும் நிலைக்கு நானே பொறுப்பு. *சோம்பேறித்தனத்தை எந்த வழியிலும் துரத்தியாக வேண்டும். சுறுசுறுப்பு என்பதற்கு எதிர்ப்பது என்பது பொருள்.

News September 8, 2025

துணை ஜனாதிபதி தேர்தல்: இன்று மாதிரி வாக்குப்பதிவு

image

துணை ஜனாதிபதி தேர்தல் நாளை நடைபெறும் நிலையில் மாதிரி வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது. மதியம் 2.30 மணி அளவில் நாடாளுமன்ற வளாகத்தில் இந்த மாதிரி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இதில் எம்.பி.க்கள் எவ்வாறு வாக்களிக்க வேண்டும் உள்ளிட்ட நடைமுறைகள் எடுத்துரைக்கப்படும். தேர்தலில் NDA சார்பில் சிபி ராதாகிருஷ்ணனும், இந்தியா கூட்டணி சார்பில் சுதர்சன ரெட்டியும் போட்டியிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

News September 8, 2025

உழவர்களுக்கு துரோகம் இழைக்காதீர்: அன்புமணி

image

ராமநாதபுரத்தில் ஹைட்ரோ கார்பன் கிணறுக்கான அனுமதி ரத்து செய்யப்படாதது ஏன் என அன்புமணி கேள்வி எழுப்பியுள்ளார். திட்டத்திற்கு எதிர்ப்பு கிளம்பியதால் வழங்கிய அனுமதியை திரும்ப பெற மாநில சுற்றுச்சூழல் ஆணையத்திற்கு TN அரசு அறிவுறுத்தியது. ஆனால் தற்போது வரை அது ரத்தாகவில்லை என அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். எனவே உழவர்களுக்கு துரோகம் இழைக்காமல் TN அரசு அந்த அனுமதி ரத்தை உறுதி செய்யுமாறு வலியுறுத்தியுள்ளார்.

error: Content is protected !!