News June 7, 2024
அரசு விடுதிகளில் மாணவர்கள் சேர்க்கை – கலெக்டர் அறிவிப்பு

தமிழக அரசு கோவை மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர் மரபினர் மாணவர்கள் மற்றும் மாணவியருக்கென 26 விடுதிகள் நடத்துகிறது. பள்ளி விடுதியில் சேர வரும் 14-ம்தேதிக்குள்ளும் , கல்லூரி விடுதியில் சேர 15-ம் தேதிக்குள்ளும் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பத்தை, விடுதி காப்பாளர் அல்லது கலெக்டர் அலுவலகத்தில் வழங்கலாம் என கோவை மாவட்ட கலெக்டர் கிராந்தி குமார் தெரிவித்துள்ளார்
Similar News
News August 18, 2025
கோவை: டிகிரி போதும்.. LIC-யில் வேலை!

கோவை மக்களே, இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தில் (LIC) காலியாக உள்ள உதவி நிர்வாக அலுவலர்கள், உதவி பொறியாளர் உள்ளிட்ட 841 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு பட்டப்படிப்பு முடித்தவர்கள் முதல் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.88,635 முதல் ரூ.1,69,025 வரை சம்பளம் வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு <
News August 18, 2025
கோவையில் பலே மோசடி: போலீசார் எச்சரிக்கை!

கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார், மாணவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதில், கல்வி உதவித்தொகை பெற்றுத்தருவதாக ஒரு கும்பல், மாணவர்களின் செல்போனுக்கு QR CODE அனுப்பி ஸ்கேன் செய்ய அறிவுறுத்துகின்றனர். அதை ஸ்கேன் செய்தால் வங்கி கணக்கிலிருந்து மொத்த பணமும் மோசடி செய்யப்படும். எனவே மாணவர்களும், பெற்றோர்களும் விழிப்புடன் இருக்க வேண்டும். ஆன்லைன் மோசடி புகார்களுக்கு 1930 தொடர்பு கொள்ளலாம். SHARE IT
News August 18, 2025
மேட்டுப்பாளையம்: விரக்தியில் கணவன் தற்கொலை

சிறுமுகை கென்னடி வீதியைச் சேர்ந்தவர் செல்வகுமார். சொந்தமாக கார் வைத்து ஓட்டி வருகிறார். மனைவியும் இரு மகன்களும் உள்ளனர். கருத்து வேறுபாட்டால் மனைவியை விட்டு பிரிந்து ஓராண்டாக வசித்து வரும் நிலையில், 4 மாதங்களுக்கு முன் சட்டப்படி விவாகரத்து பெற்றுள்ளனர். இதனிடையே மனைவிக்கு வேறொருவருடன் திருமணம் நிச்சயமானதை அறிந்து விரக்தியடைந்த செல்வக்குமார், நேற்று தற்கொலை செய்து கொண்டார்.