News June 7, 2024
தேனி: பாதுகாப்பாக வைக்கப்பட்ட இயந்திரம்

தேனி மக்களவை தொகுதியில் தேர்தலுக்கு பயன்படுத்தப்பட்ட ஓட்டு பதிவு இயந்திரங்கள் தேனி கலெக்டர் அலுவலகத்தில் உள்ள பாதுகாப்பு வைப்பறைக்கு நேற்று (ஜூன்.6) கொண்டு வரப்பட்டன. தேனி மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதியில் பயன்படுத்தப்பட்ட 2450 ஓட்டுப்பதிவு இயந்திரம், தலா 1225 வி.வி.பேட், கட்டுப்பாட்டு கருவிகள் பாதுகாப்பு வைப்பறைக்கு கொண்டு வரப்பட்டு அவை போலீஸ் பாதுகாப்புடன் பூட்டி வைக்கப்பட்டன.
Similar News
News November 7, 2025
தேனி: சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்தவருக்கு சிறை

ஆண்டிபட்டி தாலுகா பகுதியை சேர்ந்தவர் முருகன் (42). இவர் 2023.அக்.1ல் அப்பகுதியை சேர்ந்த பிளஸ் 1 படிக்கும் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்துள்ளார். கடமலைக்குண்டு போலீசார் முருகனை கைது செய்த நிலையில் இந்த வழக்கு மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் வழக்கின் தீர்ப்பாக நேற்று (நவ.6) முருகனுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி கணேசன் தீர்ப்பளித்தார்.
News November 7, 2025
தேனி: ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு!

தேனியில் மாவட்ட பொது விநியோக திட்டத்தின் கீழ் மக்கள் குறைதீா் கூட்டம் நாளை (நவ.8) காலை 10 மணி முதல் 1 மணி வரை அனைத்து வட்ட வழங்கல் அலுவலகங்களிலும் நடைபெறுகிறது. மக்கள் இதில் கலந்து கொண்டு மின்னணு குடும்ப அட்டை விண்ணப்பம், பிழைத் திருத்தம், புகைப்படம் பதிவேற்றம், பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம், கைப்பேசி எண் பதிவுகளிக்கு மனு அளித்து தீர்வு காணலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News November 7, 2025
தேனி: இளம்பெண் தற்கொலை

போடியை சேர்ந்த அசோனியா (30) என்பவர் அவரது கணவரை விவாகரத்து செய்த நிலையில் காமாட்சி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு தேனியில் வசித்து வந்துள்ளார். சில தினங்களாக காமாட்சி மற்றும் அசோனியாவுக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் மன வேதனையில் இருந்து வந்த அசோனியா நேற்று (நவ.6) அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தேனி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை.


